செவ்வாய், 21 செப்டம்பர், 2010

கோதுமை மாவிற்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்படும். தே.சு.முன்னண

அரச வைத்தியசாலைகளிலும், சிறைச்சாலைகளிலும், இராணுவத்தினருக்கும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் பாண்களை வழங்காது அரிசிமாவினால் தயாரிக்கும் உணவுகளை வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இலங்கையில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டம் நெருங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த தீவிரவாத வரிசையில் கோதுமை மா இறக்குமதி முன்னிலை வகிப்பதாகவும், இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற கோதுமை மா தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மாவுக்கு எதிரான போராட்டத்தை தேசிய சுதந்திர முன்னணி ஆரம்பிக்கும் எனவும், இதனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் சவாலை அரசாங்கம் ஏற்கும் எனவும் பியசிறி விஜேநாயக்க கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: