வெள்ளி, 24 செப்டம்பர், 2010

வளர்ந்த நாடுகளின் உதவியை வளரும் நாடுகள் எதிர்பார்க்கக்கூடாது: ஒபாமா

வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளின் உதவியையே முற்றிலும் நம்பியிருக்காமல், தங்களுக்குள்ளேயே உதவிக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவுறுத்தியுள்ளார். ஐ.நா. சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனைக் கூறிய அவர், மேலும் பேசியதாவது:

வளரும் நாடுகள் வளர்ச்சி பெறவும், வெற்றியடையவும் நாங்கள் விரும்புகிறோம். அதில் உங்களது நலனும் உள்ளது; எங்களது நலனும் உள்ளது. உங்களது (வளரும் நாடுகளின்) கனவை நனவாக்க நாங்கள் உதவ விரும்புகிறோம். ஆனால் உங்களுக்கு தலைமையேற்க உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

நீங்களும், உங்களது மக்களால் மட்டுமே அந்த கடினமான முடிவை தீர்மானிக்க முடியும்.உங்களது மக்களின் நலன்கள் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நீடித்த முதலீடுகளை உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்று ஒபாமா மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை: