வெள்ளி, 2 ஜூலை, 2010

பிள்ளை பிடிகாரன்,காப்பவனாக மாறிய மாயம்!



-அர்ச்சுணன்
முன்னாள் பெண் போராளிகளின் தற்போதை அவலை நிலை குறித்து நாடாளுமன்றத்தில் சிறீதரன் அவர்கள் குரல் கொடுததினை வரவேற்கும் அதே வேளை, அந்த பெண்கள் இன்று இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதற்கு அவரும் துணை போனவர் என்பதினை மக்கள் அறிய வேண்டும். புலிகளின் சிறப்பு தளபதியாக இருந்த தீபன் என்பவரின் சகோதரியை திருமணம் முடித்த சிறிதரன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் தலமை ஆசிரியாக பணிபுரிந்தவர் ஆவார். இவர் தலமை ஆசிரியராக கடமையாற்றிகொண்டு,புலிகளுக்கு பிள்ளை பிடித்து கொடுக்கும் செயலமையும் புரிந்தவர் ஆவார்.
கிளிநொச்சி மக்கள் யாவரும் இதனை நன்றாக அறிவார்கள். பாடசாலை முடிந்து மாணவ, மாணவிகள் வீடு திரும்பும் வேளை அவர்களை இடைமறித்து சிறிலங்கா செஞ்சிலுவ சங்க(ளுடுசுஊ) ஜீப்பில் கடத்தி சென்றவர்களில் சிறீதரனும் ஒருவராவார். புலி உறுப்பினர்களுடன் இணைந்து மாணவிகளை கடத்தி சென்று அவர்களின் வாழ்கையினை சீரளித்துவிட்டு, தற்பொழுது அவர்களுக்காக குரல் கொடுக்கும் அவரின் செயல் மிகவவும் அருவருக்கதக்க செயலாகும்.
பாலியல் வல்லுறவிற்கும், உளரீதியான உபாதைளுக்கும் உள்ளாகிவரும் அந்த பெண்களின் ஏக்கங்களுக்கு சிறீதரன் பதில் கூறியே ஆகவேண்டும். தான் செய்த பாவத்திற்கு இவர் பரிகாரம் தேடவேண்டுமானால்! இவரின் கடந்த கால குற்றத்திற்கு பகீரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கோருவதோடு தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
மாணவ, மாணவிகளை பாதுகாக்க வேண்டிய தலமை ஆசிரியரே அந்த பிள்ளைகளை கடத்தி செல்லப்படுவதற்கு துணைபுரிந்தார் என்றால்! வேலியே பயிரை மேய்ந்தது போன்றது ஆகிவிடாதா? செய்ததையும் செய்து விட்டு அந்த பெண்கள் குறித்து கவலை கொள்வதும், அவர்கள் பாதிக்கப்படுவதாக முறையிடுவதும் கேவலமான செயல் என்பதினை அவரினால் புரிந்து கொள்ள முடியவில்லையா? இப்படிப்பட்ட சிவஞானம் சிறீதரனை நாடாமன்ற உறுப்பினருக்கான நியமனத்தினை வழங்கிய சம்மந்தரை நோவதா அல்லது, அவரை நாடாளுமன்றம் செல்ல வைத்த மக்களை மறதியாளர்கள் என்பதா?
மக்கள் தமது தரத்திற்கு ஏற்ப தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வார்கள் என்று உலக அறிஞர் பேனாட்சா கூறியதினை வட மாகாண மக்கள் உண்மை என்கின்றார்களா?
தமிழ் பெண்மையை வன்முறைக்கு பயன்படுத்துவதற்காக விடுதலை புலிகளின் தலமை வலுக்கட்டாயமாக பிடித்து சென்று தடுத்து வைத்திருந்தது. பெண்களின் கூத்தலுக்கு இயற்கையிலேயே மணமுள்ளதா அல்லது வாசனை திரவியங்களை பூசிக்கொள்வதினாலும், மலர்களை சூடிக்கொள்வதினாலும் மணம் உண்டானதா என்று பெண்களின் கூந்தல் குறித்து வாதம் புரிந்த தமிழர்கள்,புலிகளின் காலத்தில் கூந்தல் அறுக்கப்பட்ட பெண்களை பார்கவேண்டியது இருந்தது. 
புனர்வாழ்வு அமைச்சராக இருக்கும் மனிதாபியான டியூ. குணசேகரா அவர்களுடன் பழகியவன் என்ற வகையில் அவரின் அரசியல் பார்வை குறித்து என்னால் கூற முடியும். ஏனைய சிங்கள அரசியல் வாதிகள் போன்று வார்த்தையளவில் இனங்களுக்கு இடையிலான மீள் இணக்கப்பாட்டின் அவசியம் குறித்து பேசுபவர் அல்ல. தமிழ் இனத்திற்கு உரிய உரிமைகளும்,மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்.
2008 ஆம் இடதுசாரி கட்சிகளினால் நடத்தப்பட்ட மேதின கூட்டத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பினை தமிழ்கட்சி ஒன்று ஏற்படுத்தி தந்ததினை அடுத்து, டியூ. குணசேகரா, பேராசிரியர் திஸவிதாரண, வாசுதேவ நாணயக்காரா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பெண்களுக்கான புனர்வாழ்வினை ஏற்படுத்துவதற்கான பொறுப்பில் இருக்கும் தன்னிடம் சிறீதரன் பேசாது, வரவு செலவு திட்டவாத இடைவெளியில் ஏன் பேசவேண்டும் என்று டியூ.குணசேகரா கேட்டிருக்கின்றார். இந்த சம்பவம் குறித்து விசாரனை செய்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டியூ.குணசேகரா அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்
 

கருத்துகள் இல்லை: