செவ்வாய், 29 ஜூன், 2010

மாவோயிஸ்டுகள் வெறித்தாக்குதல் :26 துணை ராணுவப்படை வீரர்கள் ் பலி

ராய்ப்பூர் : சத்திஸ்கரில் துணை ராணுவப்படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 ராணுவத்தினர் பலியாயினர்.சத்திஸ்கர், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், மாவோயிஸ்ட் வேட்டையில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர், மாலை தங்களது முகாம்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை நோக்கி, மாவோயிஸ்டுகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வெறித் தாக்குதல் நடத்தினர். இதில், 26 ராணுவத்தினர் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து சி.ஆர்.பி.எப்., தலைவர் விக்ரம் ஸ்ரீவத்சவா டில்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., வீரர்களுடன், சத்திஸ்கர், சிறப்பு படை போலீசாரும் காயமடைந்துள்ளனர். இதில், ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது,' என்றார்.சத்திஸ்கரில், கடந்த ஏப்ரல் 6ல், தந்தேவாடாவில், மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 75 துணை ராணுவத்தினர் பலியாயினர். அதன் பின், மே 8ல் நாராயண்பூரில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை: