சனி, 3 ஜூலை, 2010

ஆசிரியைகள் "வெறியாட்டம்' எல்.கே.ஜி., குழந்தைக்கு பிரம்படி :உடலில் கை, கால், முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில்

பண்ருட்டியில் எல்.கே.ஜி., குழந்தையை பிரம்பால் அடித்த ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாகூர் வீதியைச் சேர்ந்தவர் முஸ்தபா பராக். இவரது மகள் தன்சிராபெல்லா (3). கடந்த 20 நாட்களுக்கு முன், 2,800 ரூபாய் சேர்க்கை கட்டணம் செலுத்தி பண்ருட்டி தட்டாஞ்சாவடி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்தனர். பள்ளியில் குழந்தை நேற்று முன்தினம் குறும்பு செய்ததால் ஆசிரியை, பிரம்பால் அடித்துள்ளார். அதன் பிறகும் குழந்தை குறும்பு செய்யவே பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியையும் தன்சிராபெல்லாவை பிரம்பால் அடித்தார். மதியம் வீட்டிற்கு சோர்வுடன் வந்த குழந்தையை பெற்றோர் விசாரித்ததில், ஆசிரியை பிரம்பால் அடித்தது தெரியவந்தது. உடலில் கை, கால், முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில் பிரம்படி தழும்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதைத் தொடர்ந்து தங்களது உறவினர்களுடன் பள்ளி முன் திரண்டனர். குழந்தையை தாக்கியது குறித்து விளக்கம் கேட்டு முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாகம் உரிய பதில் கூறாமல் டி.சி., கொடுத்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர் அதை அங்கேயே கிழித்தெறிந்து விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அட பாவிங்களா...நீங்க எல்லாம் மனுசிங்களா....இல்ல அரக்கிகளா....பச்ச கொளந்தைய போட்டு இப்படி அடிச்சிருக்கீங்களே.....உங்களுக்கெல்லாம் பிள்ளைகள் இல்ல...சேட்டை பண்ணினால் பாரேன்ட்ஸ் கிட்ட சொல்லுங்க...அடிக்கிற உரிமைய யார் கொடுத்தா..??? அரசு இந்த பள்ளி மேல் எல்லாம் நடவடிக்கை எடுக்கணும். சும்மா வாயளவுல சட்ட திட்டங்கள் இருக்க கூடாது....
சஞ்சீவ் - bangalore,India
2010-07-03 06:22:03 IST
கிழிதெரிந்தது தவறு நண்பரே, கோர்டிற்கு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இது போன்ற பள்ளிகள் மாண்டிசோரி என்றொரு கான்செப்ட் இருப்பது தெரியுமா? குழந்தைகளை கொட்டிலைபோல் அடக்கி வைத்து பாடம் நடத்தினால் குறும்பு செய்யாமல் என்ன செய்வர், 3 வயது குழந்தையை அடித்துள்ள ஆசிரியர் என்ன மாடா?...
Vaidyanathan - hyderabad,India
2010-07-03 06:05:46 IST
பிஞ்சு குழந்தைகளை அடிக்கும் ஈன புத்தி கொண்ட வக்கிரங்கள் எல்லா இடங்களிலும் இருக்கே. இந்த மிருகங்களை பள்ளி நிர்வாகம் மலிவுக்காக அமர்த்துகின்ற அவலம் மிகவும் கேவலம். சொன்னாலும் தெரியாத சுயமாவும் புரியாத பணத்தாசை மட்டுமே உள்ள பதர்கள் சில பள்ளியில் irukke....
jeni - california,India
2010-07-03 05:12:37 IST
அடிபாவி உருப்படவே மாட்ட . பச்ச பிள்ளைய இப்படி அடிசிருக்கியே ....உன்ன தெருவுல நிப்பாட்டி தோல உரிக்கணும் ....உனக்கு சம்பளமே அவங்க குறும்பெல்லாம் சஹிக்கிரதுக்கு தான்.....உன் பிள்ளைய எவளாச்சு சாத்துவா ....அப்போ புரியும் உனக்கு...எரும .......
maricar - london,Uruguay
2010-07-03 04:58:12 IST
அந்த இரு ராட்சசிகளையும் நடு வீதியில் நிற்க வைத்து அந்த குழந்தையின் தாய் தந்தையர், டீச்சர் என்ற கொம்பு முளைத்த அரக்கிகளுக்கு பிரம்படி கொடுக்க செய்ய வேண்டும். போலிசும் அரசும் ஆவன செய்ய வேண்டும் .இங்கிலாந்தில் டீச்சர் என்ன பெற்றவர்களே குழந்தைகளை அடித்தால் சிறை தண்டனையோடு குழந்தையையும் அவர்களிடம் இருந்து பிரித்து அரசே பராமரிக்கும். இந்த மாதிரி கடுமையாக தண்டித்தால் நம் நாட்டின் இளைய சமுதாயத்தை,வளரும் பிஞ்சு உள்ளங்களையும் ,அவர்களின் முன்னேற்றமான எதிர் காலத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியரின் அராஜகம் ஒழியும். ஆசிரியர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலால் இன்னும் எத்தனை குழந்தைகள் பாதிக்க படுகிரோதோ,எத்தனை பெற்றோர் வேறு வழி இல்லாமல் மனதில் வேதனை படுகிறார்களோ இந்திய அரசு இதற்கு கடுமையாக தண்டிக்க வேண்டும் ....
RAJ - LONDON,India
2010-07-03 04:45:47 IST

கருத்துகள் இல்லை: