வெள்ளி, 2 ஜூலை, 2010

ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையில்

தேசியப் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுடன் இன்றைய பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தை நேற்றைய தினம் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும், சந்திரகாந்தனின் வசதி கருதி கூட்டத்தை இன்றைய தினத்திற்கு மாற்றியதாக சிறீரெலோவின் தலைவர் திரு உதயன் அவர்கள் தெரிவித்தார். இதேவேளை, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: