சனி, 3 ஜூலை, 2010

திலீபனின் சிலை உடைப்புக்கு 50 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி விஜயகலா

டக்ளஸுக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்ட ஈடு கோரி வழக்கு - விஜயகலா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக 50 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளார். இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு எதிராக அபாண்டமாக குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தமிழ்மிரர் இணையதளத்திடம் கூறினார். யாழ்ப்பாணம்,நல்லூரில் நிறுவப்பட்டிருந்த  தியாகி திலீபனின் சிலை உடைப்புக்கு விஜயகலா மஹேஸ்வரனே காரணம் என உள்நாட்டு,வெளிநாட்டு ஊடகங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிவருகின்றார். நாடாளுமன்றத்தில் வரவு,செலவுத்திட்ட  உரை மீதான விவாதம் முடிவடைந்ததும் தாம் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் விஜயகலா மஹேஸ்வரன் தமிழ்மிரர் இணையதளத்திடம் மேலும் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை: