வெள்ளி, 2 ஜூலை, 2010

இலங்கையின் முதலாவது கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றி!

இலங்கையின் வைத்திய வரலாற்றில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.இதன் மூலம் தேசிய வைத்தியசாலை மாபெரும் சாதனை படைத்திருக்கின்றது.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரே இந்த சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

40 வயதான ஒரு நோயாளிக்கு இந்த மாற்று கல்லீரல் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.மூளை செயலிழந்து வாழ முடியாத நிலையிலிருந்த நோயாளி ஒருவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கல்லீரல் ஒன்றே மேற்படி நபருக்குப் பொறுத்தப்பட்டுள்ளது.இவரிடமிருந்து சிறுநீரகமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சைக்காக 24 மணி நேரம் செலவிடப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள இதுவரையில் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கே பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்கு சுமார் 5 மில்லியன் ரூபா வரையில் செலவிட வேண்டியும் இருந்தது.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அரிய சாதனை இந்நிலைமையை மாற்றியமைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: