வெள்ளி, 7 மே, 2010

பொலிஸ் பதிவு, ஊரடங்கு - அவசரகாலச் சட்டத்தில் நீக்கம் : பீரிஸ்

தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற பல புலி ஆதரவு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. எனவே இச்சட்டங்களில் சிலவற்றை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளது.

அவசரகாலச் சட்டத்தின்கீழ் இதுவரை நடைமுறையிலிருந்த பொலிஸ் பதிவுமுறை, கூட்டங்களை நடத்துவதற்கான தடை, ஒன்றுகூடுவதற்கான தடை, ஊரடங்குச் சட்டம் என்பன உட்பட சில ஷரத்துக்களுடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற பல புலி ஆதரவு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. எனவே இச்சட்டங்களில் சிலவற்றை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளது.

முழுமையாக நீக்க முடியாது

அவசரகால சட்டத்தை முழுயைமாக நீக்க முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது. தேசிய பாதுகாப்புக்கு அது அவசியமானதாகும். படையினருக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. விசாரணைகளையும் உளவு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாயின் இச்சரத்தினையும் நீக்க முடியாது.

சுற்றுலாத்துறை மேம்பட்டு வருகின்றது. எனவே வெளிநாட்டு வருமானங்களை அதிகரிப்பதற்கு சட்டங்கள் தளர்த்தப்பட்டு வருகின்றன. புனரமைப்புக்கள் புனர்வாழ்வு தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையும் நியமித்துள்ளார்.

மேலும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளார். உலகின் கவனத்தை திருப்புவதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்."

கருத்துகள் இல்லை: