சனி, 8 மே, 2010

முள்ளிவாய்க்காலில் இருந்து மக்களோடு வந்த புலிகளில் சிலர் இத்தாலியில் அகப்பட்டனர்

அருமைநாதன் கிருஷ்ணஜெகன் (22) ‐ சாவகச்சேரி

பாக்குலலகிருஷ்ணா கோபாலகிருஷ்ணன் (20) சாவகச்சேரி

கஜிதா ரஞ்சிதநாதன் (23) யாழப்பாணம்

சிவநேஸ்வரன் கோகிலதாஸ் (31) காரைநகர்

தர்மருகஜனி சிறிதரன் (26) யாழ்ப்பபாணம்

ஸ்டெலின்ராசா துஷ்யந்தன் (29) யாழ்ப்பாணம்

தர்மகுலசிங்கம் துஷ்யந்தன் (24) மாணிப்பாய்

எட்வட் யேசுஜெய்சன் (27) மன்னார்‐ பேசாலை

நந்தகுமார் உதயபுத்திரன் (25) உடுவில்
விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்கள் மத்தியில் இருந்த நிலையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என கைதுசெய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் இருந்ததாகவும் இத்தாலியில் தம்மை சந்திக்கும் நபர் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தமக்கு அறிவிக்கவிருந்ததாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் இத்தாலிய காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கிருஷ்ணன் என்பவர் இவர்களை சந்தித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நமக்காக நாம் நிதி திரட்டல் நடவடிக்கையின் கீழ் இத்தாலியில் நிதித் திரட்டும் பொறுப்பு கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: