சனி, 8 மே, 2010

பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை லேகியம் வழங்கப்படுவதாக ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து

பதிவு செய்தவர்: நெய்னா கனடா
பதிவு செய்தது: 08 May 2010 5:32 pm
முதலில் போகிறவனை அடிக்கணும் அடுத்தது மக்களை ஏமாற்றும் சாமியார்களை செருப்பாலே அடிக்கணும்.என்ன செய்வது இதற்க்கு அதிகாரிகளும் உடந்தை என்ன செய்வது முதலில் நாட்டில் கல்வி சரியாக இருந்தால் இந்த மாதிரி நடக்க வாய்ப்புகள் குரைஉ
சென்னை: பெண் பக்தர்களுக்கு போதை லேகியம்கொடுக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கல்கி பகவான்

சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையம் அருகே பத்துலவல்லத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இங்கு கல்கி பகவானாக இருப்பவரின் உண்மையான பெயர் விஜயகுமார். இவர் முன்பு எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தவர். இவரது மனைவி புஜ்ஜம்மா. இவர் தனது பெயரை அம்மா பகவானாக மாற்றி பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.

கல்கி ஆசிரமத்தில் பெரும் மோசடிகள் நடப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன.சமீபத்தில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கல்கி ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை லேகியம் வழங்கப்படுவதாக ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து ஒளிபரப்பியது. அதில் போதை லேகியம் சாப்பிட்ட பெண்கள் மயங்கிவிழும் காட்சிகள் இடம் பெற்றன. இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கல்கி ஆசிரம நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை.

இதற்கு விஜயவாடாவை சேர்ந்த கல்கி ஆசிரம பெண் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி பக்தர் சுதாராணி கூறும்போது, நான் கடந்த 6 ஆண்டுகளாக கல்கி ஆசிரமம் சென்று வருகிறேன். அங்கு தீட்சைகளால் கொடுக்கப்படும் லேகியத்தில் ஒருவித போதைப்பொருள் கலந்துள்ளது. அதை சாப்பிட்ட பெண்கள் பல மணி நேரம் மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

இந்த லேகியம் சாப்பிட்ட பலர் சிறுநீரக கோளாறு, வயிறு கோளாறு, இதய நோய், ரத்த அழுத்த கோளாறின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.

இது பற்றி பல தடவை போலீசில் புகார் அளித்தும் இதுவரை கல்கி பகவானிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தவில்லை. போலீசார் கல்கி பகவான், அம்மா பகவான் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களை கடவுள் என்று எங்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துவிட்டனர்.எனவே, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

தங்களை கடவுள் என்று கூறி ஏமாற்றி வரும் 2 பகவான்களும் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி உள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை: