சனி, 3 அக்டோபர், 2020

கொரோனா நாசி ஸ்வாப் சோதனையில் பெண்ணின் மூளையை துளைத்தது, மூக்கிலிருந்து மூளை திரவம் கசிந்தது

.dailythanthi.com :;  இந்த நிலையில்,அமெரிக்காவை சேர்ந்த  40 வயதான பெண் ஒருவருக்கு மூக்கு வழியாக மாதிரி எடுக்கும் போது, பரிசோதனை செய்தவரின் கவனக்குறைவால், அந்த குச்சியானது மிக வேகமாக மூளையின் சுற்றுப்புற அமைப்பை உடைத்துள்ளது.இந்த பாதிப்பு காரணமாக மூளையை சுற்றியுள்ள திரவமானது மூக்கு வழியாக அந்த பெண்ணுக்கு ஒழுகத்தொடங்கியதாக மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆராய்ச்சி இதழில் விரிவாக எழுதியுள்ளார்.இந்த விபத்தானது கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதமான அமைந்துள்ளதாகவும் அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாஷிங்டன் உலகம் முழுவதும் கோரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இன்னமும் ஓய்ந்த பாதிப்பு இல்லை. கொரோனாவை கண்டறிய ஆர்டி பிசிஆர் எனும் பரிசோதனை முறை தற்போது கையாளப்படுகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை: