செவ்வாய், 29 செப்டம்பர், 2020

அருந்ததியர் உள் ஒதுக்கீடு ஆர் எஸ் எஸ் யின் சதிவேலை... ஆதிக்க தலித் ஜாதிவெறியின் உச்சம்

K
athiravan Mayavan
: வன்னியரசும் அருந்ததியர் இட ஒதுக்கீடும்.. திரு.அ.மார்க்ஸ் என்னும்
அறிவாளி தான்.பட்டியல் வெளியேற்றம் குறித்து மருத்துவர் கிருஷ்ணசாமி பேசிய போது தலித் ஒற்றுமைக்கு எதிரானது என்று திரு.மார்க்ஸ் பேசவில்லை. அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்த போது தலித் ஒற்றுமை பாதிக்கும் அதுவெல்லாம் ஆர்எஸ்எஸ் சதி என்று பேசவில்லை.#
ம் ..
ஆக சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள விளிம்பு நிலை மக்களான அருந்ததியர் மக்கள் சமூகத்திலும் அரசியலிலும் குறைந்தது தங்களை கீழ் ஜாதியாவும் தீண்டாமைக்கு உட்படுத்தும் "பறையர்" மக்களுக்கு சமமாவது கல்வி ,பொருளாதாரம், அரசியல் என சமூகத்தில் உயர கருதுகிற மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் சம பங்கிட்டு கிடைக்க வேண்டும் என அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீட்டை வழங்கியதை எவ்வளவு வன்மத்தோடு அதுவும் ஆதிக்க தலித் ஜாதிவெறியோடு எதிர்க்கிறது விசிக என்பதற்கு வன்னியரசு வின் முகநூல் பதிவே சாட்சி..
"அதுவும் அருந்ததியர் மக்களுக்கு வழங்கிய உள் ஒதுக்கீடு என்பதே ஆர் எஸ் எஸ் யின் சதிவேலை தான் என்று சொல்வது ஆதிக்க தலித் ஜாதிவெறியின் உச்சம் என சொல்லலாம்.."
எப்போதும் அருந்ததியர் மக்களை தலித்கலவே கருத்தமாட்டார்கள் என்பதே உண்மையாகும். இனியாவது அருந்ததியர் தலைவர்களும் சமூக நீதி தலைவர்களும் இவர்களை போன்ற
ஜாதி ஒழிப்பாளர்களின் கோரமுகத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்..
பறையராய். ஓன்று இணைவோம் என்பதைத்தான் "ஆதிதிராவிடராய் ஓன்று இணைவோம் "என விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் அவர்கள் சொல்லி இருக்கிறார். இந்த கூற்றை விமரிசித்த அ .மார்க்ஸ் அவர்களை விமர்சிக்கும் பதிவில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கையே ஆர் ஏஸ் ஏஸ் ஏற்பட்டு தான் என்பது போல வன்னியரசு பேசுவது நிராயுதபாணியாக இருக்கும் அருந்ததியர் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்..
மீண்டும் சொல்கிறேன் ஜாதி ஒழிப்பை சேரியில் இருந்து துவங்காத வரை எவ்வளவு தான் "அம்பேத்கர் "பற்றி மணிக்கணக்கில் பேசினாலும் எந்த பயனும் இல்லை .பிம்பங்களால் மட்டும் ஜாதியை ஒழிக்க முடியாது ..தன்னுள் இருக்கும் சுய ஜாதிவெறியை ஒழிக்காமல் ஜாதி ஒழிய வாய்ப்பு இல்லை அதுவரை இதுபோன்ற வன்னியரசுகள் உருவாக்கி கொண்டு தான் இருப்பார்கள்..ஜாதி ஒழிப்பை பேசி கொண்டு தான் இருப்பார்கள்..
அனால் ஜாதி ஒழிப்பு என்பது சாத்தியம்
ஆகாது இங்கு "ஜாதி ஒழிப்பு "என்பது வோட்டு அரசியலோடு தொடர்பு உடையது ஆகும்..
கதிரவன் மும்பை

கருத்துகள் இல்லை: