ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

பெரியாரிஸ்ட் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! பெரியாரிஸ்ட் என்று யார் உள்ளனர் ?

Kandasamy Mariyappan : · பெரியாரிஸ்ட் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து இந்துத்துவா சக்திகளிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். RSS, VHP, இந்து முன்னணி போன்ற இந்துத்துவா இயக்கங்கள் ஒருபொழுதும் பாஜகவையோ, அதன் தலைவர்களையோ, அதன் செயல்பாடுகளையோ குறை கூறுவதில்லை. இயற்கை வளங்களை பெரும் முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுப்பதில் பாஜகதான் முதலிடத்தில் உள்ளது. ஊழலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. தீவிரவாதிகளையே MLA, MP யாக தேர்ந்தெடுத்துள்ளது. ரவுடிஸம் செய்வதில் முன்னணியில் இருக்கிறது.
ஆனாலும், இந்துத்துவா இயக்கங்கள் பாஜகவை குறை கூறுவதில்லை. காரணம், இந்துத்துவா கும்பல்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் ஆதரவு பாஜக. அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுபவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியும்.
அதேபோன்று, தமிழ்நாட்டில் திராவிட சித்தாந்தத்தை, தமிழ் தேசிய சித்தாந்தத்தை விரிவுபடுத்த அரசியல் ரீதியாக இருக்கும் ஒரே அமைப்பு திமுக மட்டுமே.
அதிமுக, ஒரு RSSன் எடுபிடி அமைப்பு அவ்வளவே.
ஆனால், பெரியாரிய, தமிழ் தேசிய இயக்கங்கள் திமுகவை பலமிழக்கச் செய்யும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்து வருவது, இந்துத்துவா கும்பல்களுக்குத்தான் சாதகமாக அமையும்.
குடும்ப ஆதிக்கத்தை எதிர்ப்பதாக எண்ணி கலைஞரை திட்டுவது,
பெரியாரிஸம் பேசிக்கொண்டு, திராவிடத்தை திட்டுவது, இந்துத்துவா சக்திகளுக்கு சிகப்பு கம்பளம் விரிப்பது போன்றாகிவிடும்.
திமுக மீது சில குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் நாம் எடுத்துக் கூறியவுடன் அவர்கள் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு முட்டாள்தனமே. கண்டிப்பாக அதற்கான காலம் கனியும், அதுவரையில் நாம் அந்த நிர்ப்பந்தத்தை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதைவிட்டு பொதுவெளியில் திமுகவை திட்டுவது இந்துத்துவா கும்பல் உள்ளே நுழைய அனைத்து வழிகளையும் திறந்து விடுவது போன்றதாகும்.
ஒருவேளை நேரடி வாக்கு அரசியலில் ஈடுபட்டு இந்துத்துவா கும்பல்களை எதிர்ப்பது பலன் தரும் என்றால் அதனைச் செய்யலாம். அப்பொழுதும் திமுகவை திட்டிக்கொண்டு அரசியல் செய்தால், அதுவும் இந்துத்துவா கும்பல்களுக்கு ஆதரவாக அமைவதோடு, சீமான் போன்று ஒரு comedy pieceஆகத்தான் பார்க்கப்படுவீர்கள்.
எனவே, திமுகவை பலப்படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயம்.
இன்றைக்கு நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, திமுக மட்டுமே.
தயவுசெய்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்துத்துவா கும்பல்களுக்கு துணை போகாதீர்கள்.
மீள் பதிவு.

 Rajanantone Christi : உண்மை 

 Vetri Thiru : திமுக திராவிடர் நல கொள்கைகளுக்கு முழு விசுவாசமாக இல்லை. அதனால்தான் விமர்சனம் வருகிறது. திராவிடர் இன நலனுக்கு விசுவாசமான வேறொரு அரசியல் இயக்கத்தை மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள். அதற்கு ஆளில்லாத.நிலையில் பிஜேபிக்கே போகிறார்கள். இது தவிர்க்கமுடியாதது. திராவிடர் இன நலன் கருத்துக்களை பரப்ப மனம் வராமல் அனுமானையும் ராமாயணத்தையும் ஆதிபராசக்தியையும் ஒளிபரப்பபி பிஜேபிக்கு ஆதரவளிக்கும் சன்டிவி க்ரூப்புக்கு திமுகவில் என்ன வேலை? · 

Kandasamy Mariyappan : சன் டிவி, கலைஞர் டிவி எதுவும் திமுகவின் சொத்து இல்லை! 

 Kandasamy Mariyappan : திமுகவை எதிர்க்க ஒருவர் பாஜகவிற்கு செல்கிறார் என்றால் அவருக்கு  கொள்கை என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று அர்த்தம் 

Vetri Thiru : அறிஞர் அண்ணாவிடமோ தந்தைபெரியாரிடமோ இதுபோன்ற சென்சார் இல்லாத ஊடக சக்தி கையிலிருந்தால் பார்ப்பனர்களை எப்படி ஓடவிடுவார்கள் என்பது தெரியாதா? 

 Vetri Thiru : கலைஞர் டிவியில் என்ன நடக்கிறது? மானாட மயிலாட மட்டும்தான் போடுவார்களா? பழைய திராவிட இயக்க மாநாடுகள் கூட்டங்கள் தலைவர்கள் உரைகளை ஒளிபரப்ப மாட்டார்களா?


Shivaraja Ramanathan
அது இங்கே பெரிய சிக்கல். அதற்கு தனி நபர்களை நீங்கள் குற்றம் சொல்ல முடியாது. அது கலாச்சாரப் பிரச்சினை. அவர்களின் அடிப்படை சித்தாந்தமே கேள்வி கேட்காமல் மேலே இருப்பவன் சொல்வதை ஏற்றுக்கொள் என்பது. அதை ஏற்றுக்கொள்ள வைக்க ஆயிரம் பொய்க் கதைகளை சொல்லி மூளைச்சலவை செய்வார்கள். நம் சித்தாந்தத்தின் அடிப்படையே கேள்வி கேட்பது. கதைகளை உடைத்து பகுத்து அறிவது. பிரச்சினை இது தான். இது சிக்கலானது. இதை top down அணுகுமுறையால் தான் தீர்க்க முடியும். Bottom up வேலைக்கு ஆகாது. Design அப்படி. அண்ணா அதைத்தான் செய்தார்

 தேர்தல் நேரம் - நடவடிக்கை எடுக்கும் நிலையிலுள்ளோர் கவனத்திற்கு உங்கள் பதிவு போய்ச் சேர வேண்டும்.

Chandra Mohan : நன்றி திரு சிவராஜா. மிகச் சமீபத்தில் நான் வாசித்த திமுக மீதான சரியான, ரத்தினச் சுருக்கமான கூர்ந்தாய்வு. சொல்வதைச் சொல்லி விட்டீர்கள், அதாவது, ஊதுவதை ஊதி விட்டீர்கள், பொழுது தானாகவே புலர வேண்டுமே !!! பார்ப்போம். - தேர்தல் நேரம் - நடவடிக்கை எடுக்கும் ந…

 See More Vetri Thiru : பிஜேபியின் இந்து கருத்தியலுக்கு மாற்றாக நாம் திராவிடன் ஆரியப்பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்கள் என்ற கருத்தியலை தூக்கிப்பிடித்து பரப்புவதை விட்டுவிட்டு திமுக இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்று பிஜேபிக்கு மாற்று இந்து இயக்கமாக சரணாகதி அடையும் அளவுக்கு கீழி… கீழிறங்கிப் போனது ஏன்? அப்புறம் எப்படி திமுகவை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியும்?

 Vetri Thiru : வாரந்தோறும் பக்தி மலர் ஒரு முழுபக்கம் வெளியிடும் தினகரனில் ஒரு நாள்கூட கால்பக்கம்கூட பழைய திராவிட இயக்கத்தலைவர்களைப்பற்றி ஆர்ய பார்ப்பனர்களின் தகிடு தத்தங்கள் பற்றி திராவிட வரலாறு பற்றி வெளியிட முடியாத தயாநிதிக்கு திமுகவில் என்ன வேலை?  நம்மைப்போன்றவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து சீரியல்கள் மூலம் பார்ப்பனர்களையும் பாரப்பனத்திகளையும் கொழுக்க வைப்பதா?… 

Vetri Thiru : உண்மையில் சன்டிவியில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு இட ஒதுக்கீடு முறைப்படி பிரதிநிதித்துவம் இருக்கிறதா? 

Vetri Thiru : திராவிட இன வரலாறு குறித்த விழிப்புணர்வு எத்தனை மாவட்ட செயலாளர்களுக்கு உண்டு? கள்ளச்சாராயம் விற்பவனும் மணல் மாபியாவும்தானே திமுகவால் பிழைக்கிறான். நிர்வாகிகளாக இருக்கிறான். · 

Vetri Thiru : இப்படிப்பட்ட ஒரு இன துரோக இயக்கத்தை நம்பி ஏமாறுவதைவிட மக்கள் எதிரியான பிஜேபி ஆர்எஸ்எஸ்சிடமே சிக்கி கஷ்டப்பட்டு தங்களுக்கான புதிய பாரப்பனரல்லாத இயக்கத்தை உருவாக்கிக் கொள்வதே நல்லது. 

 Vetri Thiru : ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நெல்லை கண்ணனை கைது ஸ்டாலின் வாய்மூடி இருந்தது ஏன்? முருகன் வேறு சுப்பிரமணியன் வேறு என்ற சுகிசிவத்தின்.மீது சங்கிகள் வெறி நாய்களைப்போன்று பாய்ந்த போதும் நடைப்பிணமாக திமுக இருந்தது ஏன்? · 

 Sekar Kali : avan aayi ponappa dmk vaai moodi irunthathu een... Ivan vayiru valikkuthu nu sonnappa vaai moodi thookiyathu eeennn....

Kothai Ravi : நெல்லை கண்ணனின் ஆபாச பேச்சை அங்கீகரிப்பவர்கள் சன் டிவியின் செயல்களை திமுகவின் கொள்கைகளாக சித்தரிப்பவர்கள் திமுக நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்க முடியாது. Vetri Thiru : வெற்றி கொண்டானைவிடவா? ·

 Kothai Ravi : Very silly. திமுக எதிர்ப்பாளர்கள் இப்படித்தான் அர்த்தமில்லா arguments! வெற்றிக்கொண்டான் கட்சிக்காக பாடுபட்டவர் நெல்லை கண்ணன் உங்களை போன்று திமுகவை திட்டுபவர்! 

 Kandasamy Mariyappan : நெல்லை கண்ணன் மற்றும் சுகி சிவம் ஒரு RSS ஆதரவாளர்கள்தானே, அவர்களை பாஜக கைது செய்ய சொன்னது, ரவுடிகளை வைத்து மிரட்டியது! 

Tharik Varsh : நெல்லைகண்ணண் ஜெயலலிதாவின் எடுபிடி · 

Vetri Thiru : கருத்தால் மாறுபட்ட மபொசியை நான்சென்ஸ் என்று சொன்னபோது அண்ணா நடத்திய போராட்டம் யாருக்காக? · 

 Vetri Thiru : அண்ணன் கேபி கந்தசாமி நடத்திய பழைய தினகரன் ஏடுகளை படித்ததுண்டா? ஸ்டாலினுக்கும் இப்ப இருக்கற திமுக நிர்வாகிகளுக்கும்அப்படி இருந்ததாவது தெரியுமா? 

Thulakol Soma Natarajan : பெரியாரியத் தோழர்கள் திமுக மீது ஆயிரம் விமரிசனங்கள் வைத்தாலும் அவர்கள் ஒரு போதும் பஜகவிற்கோ , அதன் தொங்குசதைகளான பிற அமைப்புகளுக்கோ ஆதரவளிக்க மாட்டார்கள், ஆனால் திமுகவை முழுமையாக நம்புவதற்கில்லை..ஏனெனில் மத்தியில் எந்த அரசு அமைகிறதோ அதன் தயவு அவர்களுக்குத் தேவையாய் இருக்கிறது. இந்த நிலையில் பெரியாரியத்தினர் அரசியல் களத்தில் நேரடியாகவே தனித்து இயங்க வேண்டும். 1. அவர்களே நேரடியாகக் வாக்கு அரசியலில் இறங்கவேண்டும். 2. அவர்கள் பொது உடைமையாளர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கவேண்டும்..

Vetri Thiru : உண்மை. · 

Vetri Thiru : அதுதான்.வயிற்றெரிச்சலாக உள்ளது. · 

 Kalai Selvi : பெரியாரிஸ்ட் என்று யார் உள்ளனர் ? எல்லாம் புலிகளுக்கு தாரை வார்த்து பிரபாகரனை விமர்சித்தால் பொங்கும் கூட்டங்கள் பெரியாரை அவமதித்தாலும் அசையாமல் இருக்கும் கூட்டத்திடம் முட் டிக்கொண்டிருப்பது நேரம் வீண். நமக்கு நாமே தான் தாரக மந்திரமாக இருக்கணும். 

Vetri Thiru :: எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டு மெஷினில் பித்தலாட்டம் நடக்கிறது என்று பலர் சொல்லியும் கேட்காமல் 38எம்பி சீட் கிடைத்ததால் திமுக பொதுக்குழுவில் ஒட்டு மெஷினை வேண்டாம் என்று ஒரு ஒருவரி தீர்மானம்கூட நிறைவேற்றாக ஸ்டாலினுக்கு, நாளை இதே ஓட்டு மெஷினை வைத்து பிஜேபி தோல்வியை அறிவித்தால் என்ன சொல்லி ஓட்டு மெஷின் பிக்சிங்கை பற்றி கேள்வி எழுப்ப முடியும்.? செந்தில் வடிவேல் கடந்த நாடாளுமன்ற  தேர்தலில் ஒட்டு மொத்த பெரியாரிய இயக்கங்களும் திமுக வை ஆதரித்தன. இன்றைய காலத்தின் தேவையும் இதுவே. 

Kandasamy Mariyappan : உண்மை 

Malmarugan Kothandaraman : பெரியாரியலின் மிக முக்கியமான கூறு பகுத்தறிவு. உண்மையான பெரியாரிஸ்ட் பகுத்தறிவாளனாக இருப்பான். கேள்வி கேட்பான். அதற்கு விடை சொல்ல வேண்டியது திமுக. இது வரையில் திமுகவிடமிருந்து இலங்கை படுகொலை சம்மந்தமாக எந்த திடமான பதிலும் இல்லை. இதை எப்படி கேட்காமல் இருப்பது?

 More Kandasamy Mariyappan : இலங்கை படுகொலைக்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம்! Kandasamy Mariyappan : இலங்கை படுகொலை பிரபாகரனால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்லது தனது சுயநலத்திற்காக நடந்த ஒன்று! 

Sundaram Kannan : இலங்கை படுகொலை என்ன ??

 Kothai Ravi : இலங்கை படுகொலை என்று திமுகவை கேள்வி கேட்பவன் பெரியாரிஸ்ட் ஆக இருக்க மாட்டான்.போலி சீமானிஸ்ட் ஆக இருப்பான். 

 Bharathan Kumudhan : வலதுசாரி பெரியாரிஸ்ட்டுகளும் தமிழ் தேசியம் பேசுகிறவர்களும் இதை செய்துகொண்டிருக்கிறார்கள் நாளடைவில் நமக்கு சாதகமாக வரமாட்டார்களா என்ன? பொறுப்போம்

கருத்துகள் இல்லை: