வியாழன், 1 அக்டோபர், 2020

தனித்தமிழ்நாடு பிறப்பது மோடி கையில் தான் உள்ளது

உத்தர பிரேதசத்தில் எரியும் மனிஷா வாழ்மீகியின்  உடல்
Ravishankar Ayyakkannu : நிறைய பேர் தனித்தமிழ்நாடு பிறக்குமா என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஒரு தனி நாடு எப்படி எல்லாம் பிறக்க வாய்ப்பு உண்டு?
1. நிருவாகச் சீர் கேட்டால், சோவியத் ஒன்றியம் சிதறி பல நாடுகள் உருவானது போல்...
2. போராடும் மக்கள் இன்னொரு வல்லரசு நாட்டுடன் இணைந்து போர் தொடுக்கும் போது. அதாவது, பாக்கிஸ்தானிடம் இருந்து இந்தியா உதவியுடன் வங்காள தேசம் பிரிந்தது போல்.
3. இரண்டாம் உலகப் போர் போன்ற அசாதாரணமான சூழல்களில்..
4. முதிர்ச்சியான நாடு ஒன்று பொது வாக்கெடுப்பின் மூலம் சுதந்திரம் அளிக்க முன்வரும் போது. ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதற்கு ஐக்கிய இராச்சியம் வாக்கெடுப்பு நடத்தியது போல்..
இது எதுவுமே சாத்தியம் இல்லாத நிலையில் போராட்டத்தை முன்னெடுப்பது,
தோல்வியில் முடிவதோடு மட்டுமின்றி, பெருழ் இழப்புகளையும் தரும்.
இதை எல்லாம் எண்ணிப் பார்த்து கூட,
அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் விட்டிருக்கலாம்.
ஆக, இன்றைய நிலவரப்படி,
தனித்தமிழ்நாடு பிறப்பது மோடி கையில் தான் உள்ளது.
Option 1.

கருத்துகள் இல்லை: