வியாழன், 2 ஏப்ரல், 2020

ஒரு ஆர் எஸ் எஸ்காரர் எப்படி எப்படி எல்லாம் சிந்திப்பார்? முதல்ல சிந்திப்பாரா?

டான் அசோக் : ஒரு சங்கி மூளை எப்படி வேலை செய்யும் என்பதற்கு ஒரு
அருமையான case study. யாருமே பாதிக்கப்படவில்லை என அந்த மூளை நிஜமாகவே நம்புகிறது. இதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம்?
1) டீமானடைசேஷனின் தோல்வியை பரவலாக எடுத்துச் செல்லாத மீடியா. 2) ஏ.டி.எம் வாசல்கள் உயிரைவிட்ட பலர் அன்றாடங்காய்ச்சிகள், முதியவர்கள், குறிப்பாக இந்துக்கள்.
ஆனாலும் அதெல்லாம் கண்ணில் படவில்லை. தான் மட்டும்தான் உலகம் என சுயநலமாக மட்டுமே வாழும் போக்கு.

3) தொடர் மூளைச்சலவையால், கேள்விகளுக்கு அப்பாற்பட்டு மோடியை ஆதரிக்கும் போக்கு. (ஹிட்லரை ஜெர்மனி மக்கள் ஆதரித்ததைப் போல. ஹிட்லரும் தேர்தலில் நின்று வென்றவர்தான் என்பதை நாம் நினைவுகூற வேண்டும்.)
4) ஜெயலலிதாவின் வைரங்களுக்காக நடந்த சண்டை, பிடிபட்ட கண்டெயினர்கள் என எத்தனையோ செய்திகளை அந்த காலத்தில் படித்தோம். ஆனால் அதையெல்லாம் சொல்லாமல் திமுககாரர்கள் பணத்தை மாற்ற கஷ்டப்படுகிறார்களாம், வெளிநாட்டிலேயே தவிக்கிறார்களாம்.
5) இந்தியாவில் புழங்கும் கள்ளநோட்டுகளில் பெரும்பான்மை
கள்ளநோட்டுகள் 2000ரூ கள்ளநோட்டுதான் என்கிறது செய்திகள்.
 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அடித்துக்கொண்டவர்களுக்கு,
ரொம்ப கஷ்டப்படாதீங்கப்பா, ஒரே 2000 ரூபாய் நோட்டா அடிச்சுக்கங்க என உதவி பண்ணதை தவிர ஒரு எழவையும் இந்த டீமானடைசேஷன் பண்ணவில்லை என்பது கொஞ்சமே கொஞ்சம் அறிவு இருந்தாலும் புரியும்.

கருத்துகள் இல்லை: