சனி, 4 ஏப்ரல், 2020

சுவாமி விவேகானந்தர்: தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்!

Dhinakaran Chelliah : ராமாயணம்_பற்றி தலைவர்களின் கருத்து:
மகாத்மா காந்தி: "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூசிக்கவே மாட்டேன்".
சுவாமி விவேகானந்தர்: "தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்".
ஜவகர்லால் நேரு: "ஆரிய திராவிடப் போராட்டமே ராம-ராவண யுத்தம்.'இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் போன்ற கதைகளே தவிர வேறல்ல".
இராஜகோபாலாச்சாரியார்:"இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்".
கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாதர் : "இராமயணம் தெய்வத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம்".
ஹென்றி ஸ்மித்: "ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை அசுரருகள் என்றும் கூறப்பட்டிருக்கிறது".
ரமேசு சந்திரதத்: "ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென்னிந்தியாவில் உள்ளவர்களை, ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்".
பண்டிதர் பி பொன்னம்பலம்: "ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாக கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்ட நூலாகும்".
சி. ஜே. வர்க்கி: "ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதை கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்".

ஷோஷி சந்திரதத்: "திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்து பல நாகரீகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்".
சி.பி. காவெல்: "விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனைக் கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாக கூறப்பட்டிருக்கிறது".
சந்திரசேகர பாவலர்: "சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காகவே ராமன் சம்பூகனை கொன்றான்".
ராவ்சாகிப் திமேசு:"இராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது".
ராமனை வரலாற்று நாயகனாக சுவாமி விவேகானந்தரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 1897 - ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதியிட்ட ஹிந்து நாளிதழில் அவரது பேட்டி வெளிவந்திருக்கிறது. ராமனோ கிருஷ்ணனோ வரலாற்று நாயகர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; தனி நபர்களை வரலாற்று நாயகர்களாக ஏற்கும் அளவுக்கு இந்து மதம் பலவீனமாக இல்லை. உலகில் இரண்டே வரலாற்று நாயகர்கள் தான் இருக்கிறார்கள் ஒருவர் நபிகள்நாயகம்; இன்னொருவர் கவுதம புத்தர் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இப்படி பல தலைவர்கள் விமர்சித்த ராமாயணத்தை DD யில் மறுபடி ஒளிபரப்பு செய்வதற்கு மோடி வகை செய்துள்ளார்.ராமாயண சீரியல் பார்ப்பதை விட வால்மீகி எழுதிய ராமாயணத்தைப் படிக்கும் படி கேட்டுக் கொள்வேன்.கம்ப ராமாயணத்தைச் சொல்லவில்லை,மூல நூலான வால்மீகியின் ராமாயணத்தை படிக்கும்படி வேண்டுகிறேன்.படிப்போருக்கு ராமராஜியம் என்றால் என்ன என்பது முதல் பல உண்மைகள் நன்றாக விளங்கும். ஏன் ஒருசிலர் மட்டும் இந்த இதிகாசத்தை இன்றும் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பதற்கான உண்மையான காரணங்களும் விளங்கும்.அதற்காகவாவது இந்த நூலை வாசிக்கவும்!!!

கருத்துகள் இல்லை: