திங்கள், 30 மார்ச், 2020

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைத் தாண்டும் - அதிரவைத்த ட்ரம்ப் வீடியோ


tamil.news18.com : அமெரிக்காவில் வரும் இரண்டு வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போரிட்டுவருகின்றனர். உலக அளவில் அமெரிக்காவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இதுவரையில் கொரோனாவால் 1,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-யை நெருங்கி உள்ளது. இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், ‘கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 100,000-த்துக்குள் கட்டுப்படுத்துவதே பெரிய விஷயம். கொரோனா பரவல் தொடர்ந்து இருப்பதான் காரணமாக நாடு முழுவதுமான ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் நாடு இயல்புநிலையை அடையும் என்று நம்புகிறேன். அமெரிக்காவில் அடுத்து வரும் இரண்டு வாரங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும்’என்று தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை: