சனி, 29 பிப்ரவரி, 2020

சீமான் புலம்பெயர் தமிழர்களை பா ஜ கவின் பக்கம் திருப்பி உள்ளார்?

கபிலன் காமராஜ் :  · சீமான் கூட நேரத்துக்கு தகுந்தார் போல வாயை
வாடகைக்கு விடும் பொழுது பெரியார் பற்றி பேசுவார். ஆனால் சீமான் வளர்த்திருக்கும் ஒரு சைக்கோ கூட்டம் பெரியாரை தூற்றி வெறுப்பதில் முற்றிய நிலையில் உள்ளனர். கார்த்தியின் பதிவில் பெரியாரின் முகம் மறைக்கப்படவில்லை ...  அதை பென்சில்  எடுத்து பெரியாரின் முகத்தின் மீது கிறுக்கி வெறுப்பை உமிழ்ந்துள்ளது ஒரு நாம் தமிழர் கட்சி சைக்கோ.;
 Radha Manohar  : சீமான் உலகம் முழுவதும் பாஜாகவுக்கு ஆள் பிடித்து கொடுத்திருக்கிறார் .. புலம்சிடையே பாஜக ஆதரவு அதிகம் .. அப்படியே சீமான் போலவே சிந்திக்கிறார்கள் :இது பற்றி முன்பு ஒரு தடவை எழுதிய இந்த பதிவு ......" தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் குடியுரிமை பற்றி இது வரை புலம் பெயர் தமிழரகள் பெரும் கள்ள மௌனத்தை
கடைப்பிடிக்கிறார்கள் . அதற்கு காரணம் எதுவாக இருப்பினும் அது நேர்மையானது அல்ல. . நேர்மையானதாக இருந்தால் வாயை திறந்து இருப்பார்கள் . இப்படி கள்ள மௌனம் காக்க மாட்டார்கள்.அதை விட மோசமானது அவர்களின் பாஜக பாசம்!
இன்றைய தேதியில் கனடா இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மன் சுவிஸ் இத்தாலி நோர்வே டென்மார்க் அமெரிக்கா அவுஸ்திரேலியா மற்றும் புலம்ஸ் வாழும் நாடுகளில் பாஜக தேர்தலில் போட்டியிட்டால் புலம்சின் ஒட்டு மொத்த ஓட்டுக்களும் பாஜகவுக்கே கிடைக்கும் .

இந்த கள்ள காதலை தடுக்க அவர்களின் புலியே வந்தாலும் முடியாது ... அவ்வளவு தூரம் பாஜக மேல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காதல் அளப்பெரியது .. ஆனால் பாஜகவோ இவர்களை அர்ஜுன்சம்பத்தை விட தாழ்த்தியே நடத்தும் . அதெல்லாம் இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது?

இதில் கவலைப்படவேண்டியது பாஜகவும் ஆர் எஸ் எஸ் அமைப்பும்தான் . ஏனெனில் இவர்களின் ராசி அப்படி .

இவர்கள் எந்த அரசியல் சக்தியை காதலிக்கிறார்களோ அரசியல் சக்தி அல்லது அமைப்பு காணமல் போய்விடும்.
ஏனெனில் இவர்களின் அரசியல் பற்றிய புரிந்துணர்வு ஒரு பாசிச இருளாகும்.
இவர்களின் அகராதியில்   சக மனிதரை சக மனிதராகவே கருதும் பண்பு கொஞ்சம் கம்மி ...
 என்சாய் பாஜக வித் புலம்ஸ் ..

கருத்துகள் இல்லை: