செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

யாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் சித்திரவதை என்கிறார் வரதராஜ பெருமாள்

பல்கலைக்கழகங்களில் ராக்கிங் நடப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

IBC :  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்டகுற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பகிடிவதை தொடர்பில் சான்றாதாரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே குறித்த எட்டுப்பேருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் புதுமுக மாணவர்களுக்கு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் பகிடிவதை தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை வடக்கு மாகாண ஆளுநருக்கு நாளை கிடைக்கப் பெறும் எனவும் அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவித்தன
.
Jeevan Prasad : பகிடி வதையும் சமூக பாதிப்பும் .....
ஒருவர் : "உலகத்தில் உள்ள அநேக நாடுகளில் பல்கலைக் கழகத்துக்குள் வருவோர் உலக அறிவை பெற வருகிறார்களே அன்றி முட்டி போடவோ அல்லது வயிற்றால் இழுகி கிராலின் செய்யவோ வரவில்லை. உலக பல்கலைக் கழகங்களிலிருந்து உலகத்துக்கு சேவை செய்யக் கூடியோர் உருவாகிறார்கள். எங்கள் நாட்டில் இலவச கல்வியை கொடுக்கிறார்கள். கடனும் வழங்குகிறார்கள். இதையெல்லாம் பெற்று பட்டம் பெற்ற பின் தானாக ஒரு தொழில் செய்யவோ அல்லது தொழிலை சுயமாக தேடிக் கொள்ளக் கூட இவர்களால் முயல்வதில்லை. அரசாங்கமே ஒரு தொழிலை கொடுக்க வேண்டும் என வேறு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்."
இன்னொருவர் :"இது ஒரு ஆளுமை. நியோலாஜிசம் மனிதாபிமானமற்றது என்றால், சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அதைப் பற்றி எந்த வாதமும் தேவை இல்லை. ஆனால் வெறியின் சமூகப் பயம் ஒரு பல்கலைக்கழகத்தின் நான்கு பக்கங்களைக் கூட அறியாதது. அது போதுமானதாக இல்லை. "
மூன்றாமவர்: "பகிடிவதைக்குள் மனிதாபிமானமான - மனிதாபிமானமற்ற எனும் பேச்சு எதற்கும் இடம் இல்லை. ஒருவர் விரும்பாத ஒன்றை நிர்பந்திக்க யாருக்குமே உரிமை இல்லை. அவ்வளவுதான். "
மேலே உள்ள கருத்துகள் , "உண்மையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எந்தவிதமான பகிடிவதையும் இல்லையா? எனும் கேள்வியை நம்முள் முன்வைக்கும். இலங்கை குழந்தைகள் மட்டும் சமுதாயத்தை எதிர்கொள்ள இப்படியான பகிடி வதைகள் தேவை எனும் போது மேலை நாட்டவர் சகித்துக்கொள்வது குறைவாக இருக்கிறதா? அதற்காகத்தான் இந்த பகிடி வதையா? " என கேள்வி கேட்ட போது சிலரால் பகிரப்பட்ட பதில்களாகும்.

குறிப்பாக இலங்கையில், பல்கலைக்கழக கல்வி கற்றவர்களும், பகிடிவதையை கருத்தால் நியாயப்படுத்தப்படுத்துவோரில் பெரும்பான்மையானவர்களும் ஒரு நபர் பகிடிவதை மூலம் சமூகமயமாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தில் உள்ளனர்.
இதேபோல், இலங்கையில், ஒரு வகையான சமூக வலைப்பின்னல் உள்ளது, இது பல்கலைக் கழக கல்வி பற்றி எதுவும் தெரியாதவர்களால் பகிடிவதை குறித்து தெரியாமல் பொறாமைப்படும் அறிவற்றோர் என்று தட்டிக் கழிக்க முற்படுகிறது.
பகிடிவதையை எதிர்ப்பது என்பது பல்கலைக் கழக சலுகைகளை இழப்பதற்கான "அரியஸ் கவர்" (இழந்ததை மீட்பது) என்றும் வாதிடுகிறார்கள். இது ஒரு பழி வாங்கலாக மட்டுமே தெரிகிறது. அதாவது ஒரு சமூகத்தில் உள்ளவன் தாக்கினால் அதற்கு பதிலாக அந்த சமூகத்தில் உள்ள இன்னொருவனையாவது துன்புறுத்தி பழி வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இது சாதிச் சண்டை தொடக்கம் இன - மத சண்டை வரை நாம் காணும் ஒரு நிலைதான். இதுபோன்ற மனநிலைகளால்தான் நம் நாட்டில் நிம்மதியே இல்லாது போயுள்ளது.
"வளாகத்தில் பகிடிவதை மூலம் நல்ல மக்களை உருவாக்குவதாக இருந்தால் அவர்கள் நல்ல மனிதர்களாக அவர்களை நாம் ஏன் வளாகத்தை விட்டு வெளியேறிய பின் காண முடிவதில்லை? உள்ளே சமத்துவம் பேசும் அதிகமானோர் வெளியே அந்த சமத்துவத்தை மறந்து போகின்றனர். உயர் தொழில் ஒன்றுக்கு வந்த பின் கீழ் மட்ட பணியாளர்களை சமத்துவமாக மதிப்பதில்லை. அப்படியானால் அங்கிருந்த சமத்துவம் எப்படி இல்லாமல் போனது. அங்கு நல்ல மக்கள் உருவாகவில்லை. பட்டம் மட்டுமே கையில் உள்ளது.
ஒரு நபரால் குறிவைத்து, அவன் அல்லது அவள் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஒடுக்கப்பட்டால், அதை 'கொடுமைப்படுத்துதல்' என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். பகிடி வதை என்பது கொடுமைப்படுத்தலாகவே பார்க்கப்படுகிறது. அதுவே உண்மை. நாலுபேர் சேர்ந்து ஒருவனை பரிகசிப்பது கூட கொடுமைப்படுத்தல்தான். ஒருவனின் வேதனையில் நாலுபேர் சிரிப்பதென்பது மனநோய்தான்.
பொதுவாக, வளர்ந்த நாடுகளில் 'கொடுமைப்படுத்துதல்' என்பது ஒரு முக்கியமான தலைப்பு. தொடக்கப் பள்ளிகளிலிருந்து பணியிடங்கள் வரை கொடுமைப்படுத்துவதைத் தடுக்க உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒருவரை பிடிக்காது போனால் பிரச்சனை கொடுப்பார்கள். இதை வளர்ந்த நாடுகளில் மொபிங் என்பார்கள். அதற்கெதிராக வழக்கு தொடுக்கலாம். மொபிங் செய்வோருக்கு தண்டனை வாங்கியும் கொடுக்கலாம். நீதியை பெறலாம். நம் நாட்டில் சட்டத்தை விட முதுகு சொறிவதற்கே முக்கியத்துவம் அதிகம்.
வழக்கமாக, இலங்கையில் உள்ள பள்ளி அல்லது உயர் கல்வி நிறுவனத்தில் மற்றொரு மாணவர் அல்லது மாணவியை கொடுமைப்படுத்தும் நபர் அச்சமடைய வைத்து அடுத்தவர் மரியாதையை பெறுகிறார். ஆனால் வளர்ந்த நாடுகளில் இது ஒரு அவமானம். (அந்த நாடுகளில் கொடுமைப்படுத்துதல் என்பது முழுமையாக இல்லை என்று அர்த்தமல்ல)
நம் வாழ்வில் பணி செய்யும் பணியிடத்தில் கொடுமைப்படுத்துதல் (Bullying) அல்லது துன்புறுத்தல் (Harassment) பெரும்பாலும் இல்லாமல் இல்லை. ஆனால் அவை பகிடிவதையாக இல்லை. அவற்றை அழுத்தங்கள் என நாம் சொல்கிறோம். அதனால் படும் துயரை அனைவரும் அறிவர். அதைவிட மிக மோசமானது இந்த பகிடிவதை. அதிலும் காமுக வதை.
நம் கலாச்சாரத்தில் கற்பு என்பதை பெரிய விடயமாக சிறு வயது முதலே சொல்லி வளர்க்கிறார்கள். அந்த எண்ணங்கள் சிதையும் போது பலரால் முடிவெடுக்க முடியாதவர்களாகிவிடுகிறார்கள். பகிடிவதை என்பது பழக்கப்பட்ட அல்லது பரிட்சையமான ஒருவரால் அல்லது ஒரு சிலரால் செய்யப்படுவதல்ல. துன்புறுத்தலை தாங்கிக் கொள்ள ஓரளவாவது முடியும். ஆனால் பாலியல் துன்புறுத்தலை தாங்கிக் கொள்வது என்பது முடியாத காரியம். அது கூட்டு பாலியலுக்கு சற்றும் குறைந்ததல்ல.
விரும்பிய ஒரு பெண்ணோடு படுக்கையை பகிர்ந்து கொள்வது பெரிய விடயமல்ல. ஆனால் தெரியாத ஒரு பெண்ணை துகிலுரிவதென்பது மகா பொறுக்கித்தனம்தான். அவற்றை தொலைபேசிகளினூடாக பார்ப்பதோ அல்லது அதைப் பார்த்து நண்பர்களாக ரசிப்பதோ - கேலி செய்வதோ மிக கொடுமையான ஒரு விடயம். இப்படியான மன நிலை கொண்டவர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள். தன் மனைவியை நிர்வாணமாக வீடியோ செய்வதை எத்தனை பெண்கள் அனுமதிப்பார்கள்? அப்படியிருக்க பழக்கமே இல்லாத பெண் மட்டும் உங்களுக்காக ஆடை களைந்து நிற்பாள்?
இங்கே உருவத்தை வைத்து பகிடி பண்ணுவது , செக்ஸ் டோச்சர் செய்வது, குடும்பப் பின்னணி போன்ற பிரச்சினைகளில் பெயர்களை அவமதிப்பது அல்லது சித்திரவதை செய்வது போன்ற காரணங்களால் பள்ளிக்குச் செல்வதற்குக் கூட குழந்தைகள் தயங்கும் விதத்திலான பல சம்பவங்கள் நம் சமூகத்தில் வெளியே தெரியாமல் மறைந்தே உள்ளன.
அதுபோல சிலர் படிப்பையோ அல்லது வேலையோ இடையில் நிறுத்துவதற்குக் கூட உண்மையான காரணங்களை சொல்வதில்லை. அவர்கள் மழுப்பல் காரணங்களை சொல்கிறார்கள். உண்மைகளைச் சொன்னால் நம் சமூகம் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி ஏளனம் செய்யும். அவமானப்படுத்தும். சமூகத்தை விட்டு ஒதுக்கும். இது ஒரு சமூக கொடுமை.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவரைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். அவர் அல்லது அவள் அனுபவித்த மன அல்லது உடல் ரீதியான துன்பங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அதைச் செய்தவர்களை அல்லது அதற்கு காரணமானவர்களை கேள்வி கேட்கக் கூட பலர் முனைவதில்லை. அது பெரிய விடயமா என சொல்லி கடந்து போக நினைக்கிறார்கள். கண்டு கொள்ளாதுவிடுகிறார்கள். அப்படியான ஒரு சமூகம் நாகரீகமான சமூகமாக முடியுமா எனத் தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் மேலும் மனமொடிந்து நிர்க்கதியாகி தற்கொலைவரை செல்கிறார்கள்.
பேராசிரியர் ஹரேந்திர சில்வாவின் கூற்றுப்படி, பகிடிவதை செய்வோரில் சிலருக்கு மனநல பிரச்சினைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளார். "மனநல பிரச்சினைகள்" உள்ளவர்களில் பலர் மற்றொரு நபரால் முன்னர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
பொதுவாக, இலங்கையில் உள்ள பணியிடங்கள் , வெவ்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் இந்த பகிடிவதையின் தொடரான தனித்துவமான துணை கலாச்சார எச்சங்கள் தொடர்கின்றன.
ஒரு முதலாளியால் புறக்கணிக்கப்படும் போது , புறக்கணிப்பின் குறைகளை நிவர்த்தி செய்வதை விடுத்து, தனது முதலாளி ஒரு முறை செய்த அதே விடயத்தை தனக்கு கீழுள்ளவர் மேல் செய்து மகிழ்ந்து , அதை ஒப்பீடாக காட்டி சந்தோசப்பட்டு தப்பும் நிலை பொதுவாகவே நம் சமூகத்தில் காணக் கூடியதாக உள்ளது.
அதுபோலவே பல்கலைக் கழகங்களை விட்டு வெளியேறிய படித்தவர்களில் சிலர் கூட அந்த தவறை திருத்த முற்படுவதற்கோ அல்லது ஆலோசனை சொல்வதற்கோ முயலாமல் அந்த தவறை நியாயப்படுத்த முனைவதை காணலாம். அப்படி இப்படியான குற்றங்களை நியாயப்படுத்த முனைவோர் சாதாரண மக்கள் அல்ல. பட்டப் படிப்பு பெற்ற அறிஞர்களாக இருப்பதுதான் வெட்கக் கெடு. அவர்கள் சிலையாகிப் போனவர்கள். புத்தக மூட்டைகள். அதற்கு மேல் சிந்தனையாளர்களாக இல்லை. அவர்கள் கல்வியாளர் என பட்டத்தை மட்டுமே தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனித நேயத்தையோ அல்லது நல்லதொரு சமூகம் உருவாக வேண்டும் எனும் சிந்தனையை கொண்டவர்களாகவோ அவர்கள் இல்லை என்றால் தப்பே இல்லை.
பேராசிரியர் ஹரேந்திர சில்வா கூறுகையில், “கடந்த காலங்களில் எங்கள் ஆசிரியர்கள் இருந்தார்கள், ஏதேனும் தவறு நடந்தால் மாணவர்களை படுக்கைகளுக்குள் நுழைத்து தண்டித்தார்கள். அப்படி தண்டிக்கப்பட்டவர்கள் பெரிய கல்விமானாக வெளியேறிய பின்னும் யாராவது தவறிழைத்தால் அதேபோல கட்டிலுக்கு அடியில் நுழைத்து தண்டிக்கும் நிலைக்கு இறங்குகிறார்கள்." என்றார்.
அதே மனநிலை இன்னும் நீடிக்கிறது. அவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது, ​​அவர்கள் தனது மனைவிக்கும் அவ்வாறே செய்கிறார். அதைத்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் செய்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: