புதன், 12 பிப்ரவரி, 2020

ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்தியருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்தியருக்கு கொரோனா பாதிப்புமாலைமலர் :யோகோஹாமா துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 2 இந்தியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டோக்கியோ: ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3,711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  நேற்றைய தகவலின்படி சொகுசு கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 6 தமிழர்கள் உட்பட சுமார் 100 இந்தியர்கள் உள்ள நிலையில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: