சனி, 15 ஜூன், 2019

சீனா தனது மக்களை படுகுழியில் தள்ளி விட்டு விட்டது ... உலக வல்லாதிக்க ஆசைக்காக ..

இன்றைய சீனாவின் கிராமத்து குடிசை 
R Chandrasekaran R Chanrasekaran : தோழர்களே ஒரு சோசலிச நாட்டில் நிச்சயம்
மக்களுக்கு இடையில் ஏற்றதாழ்வுகள் இருக்கும் இது படிப்படியாக குறையும்
ஆனால் சீனத்தில் கடந்த காலத்தை விட ஏற்றதாழ்வுகள் மிக வேகமாக விரிவடைந்து வருகிறது
பொது சொத்துக்களை சூறையாடி மிகப்பெரும் ஏகபோக மூலதனக்கூட்டம் உருவாகி விட்டது இந்த ஏகபோக கூட்டம் அமெரிக்காவுக்கு ஈடாவும் அதை விஞ்சி செல்லும் அளவுக்கு வளர்ந்து வருகிறது
மக்களில் பரவலாக குட்டி முதலாளிய கூட்டமும் நகர்புறங்களில் பெருகிவிட்டது கிராமப்புற ஏழைகள் பாடுதான் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறது
பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்யும் தொழிலாளர்கள் காலை எட்டு மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் உற்பத்தியை பெருக்குவோம் என உறுதிமொழி செய்து விட்டு 8,15
பணியில் இறங்கி விட வேண்டும்
உணவு இடைவேளை சிறு நீர் கழிக்க செல்வது அனைத்தும் கேமாரா மூலம் கண்காணிக்க படுகிறார்கள்

பீட்சா பர்கர் விற்கும் தொழிலாளர்களுக்கு தினமும் இவ்வளவு உணவு பொருளை விற்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால் சாலை விபத்துக்களில் இறப்போரில் இவர்களே மிக அதிகமாக இருக்கிறார்கள்
சாதாரண தொழிற்சங்க உரிமைகளுக்கு கூட மக்கள் போராடி வருகிறார்கள்
மாவோ காலத்தில் நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க விவாசாயிகள் , தொழிலாளர்கள் ,செம்படை இம்மூன்றில் இருந்தும் பிரதிநிதிகளை தேர்வு செய்து அனுப்பும் முறை இருந்தது
இக்குழு இன்று அதிகார வர்க்கத்தின் பங்காளிகளாக மாறி விட்டது அதாவது இங்குள்ள எம் எல் ஏ ,எம் பி போல் செயல்படுகிறார்கல்
சீன மிக வேகமாக வளர்ந்து வருகிறது ஆனால் இவ்வளர்ச்சி மக்களுக்கான வளர்ச்சியாக இல்லாமல் ஏகபோக முதலாளிகளின் வளர்ச்சியாக இருக்கிறது
கீழே காணப்படும் இந்த வீடு சீனத்தின் ஏழைகள் வாழ்வை சித்தரிக்கும் ஒரு எடுத்துக்காட்டு
ஒரு கட்சி எவ்வளவுதான் சிறப்பானதாக இருந்தாலும் அதற்கு புகழ் பெற்ற புரட்சிகர வரலாறு இருந்தாலும் பெரும்பாண்மை உழைக்கும் மக்கள் அதில் நடக்கும் தவறுகளையும் குறைபாடுகளையும் ஆரம்ப காலத்தில் இருந்து கண்காணித்து திருத்தும் வேலையை செய்ய கற்றுக்கொள்ள வில்லை என்றால் எத்தனை புரட்சிகள் நடந்தாலும் இதுதான் நடக்குமெனபது சீன ரசிய அனுபவங்கள் ஆகும்
உலகின் தொழில் நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் தலைமை இடத்தை பிடிக்க போராடும் சீனம் தம் மக்களை படுகுழியில் தள்ளி விட்டு விட்டது
அடுத்தடுத்த பதிவுகலில் சீனத்தை குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் பார்க்கலாம் தொடரும்

கருத்துகள் இல்லை: