புதன், 15 மே, 2019

சந்திரபாபு நாயுடு - துரைமுருகன் சந்திப்பு .. முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு..

சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்புதினத்தந்தி : ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துள்ளார். அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஸ்டாலினை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் தற்போது துரைமுருகன், ஆந்திர தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் உடன் இருந்தார். சுமார் 20 நிமிடம் நடந்த சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பு குறித்து கூறிய துரைமுருகன் இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. மனைவி மகனுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதியில் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன் எனக் கூறியுள்ளார்;

கருத்துகள் இல்லை: