செவ்வாய், 14 மே, 2019

ஸ்டாலின் : சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை

சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை: மு.க ஸ்டாலின் பேட்டி தினத்தந்தி : மு.க ஸ்டாலின் பேட்டி :  சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மு.க ஸ்டாலின் கூறியதாவது:- “ தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை. சந்திரசேகர ராவ் ஆலயங்களுக்கு செல்லவே தமிழகம் வந்தார். சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் 3-வது அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்<

கருத்துகள் இல்லை: