செவ்வாய், 14 மே, 2019

இந்தியாவில் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

தினத்தந்தி : புதுடெல்லி, விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ”விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனவும் உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத தடைச்சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991 ஆம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: