செவ்வாய், 28 நவம்பர், 2017

அடையாறு கடல் சேரும் இடத்தில் செத்து மிதக்கும் மீன்கள் ... மக்கள் அச்சம்

வங்கக் கடலில் அடையாறு கலக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள். அடையாற்றில் விடப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இதற்குக் காரணம் என சூழலியலாளர்கள் அச்சம்< சென்னை : சென்னை அடையாறு முகத்துவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடையாறு முகத்துவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. காலையில் இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து உள்ளனர். Large Number of fishes secluded near Adayar Estuary gives Shock to local people அதிகாரிகள் விரைந்து வந்து தற்போது அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடந்துள்ளனர். அதுபோல நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கடற்கரையில் 15க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: