வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பேரறிவாளன் பரோலில் விடுதலை

ஜி.லட்சுமணன் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன்  26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பேரறிவாளன்உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார்.
26 ஆண்டுகளாக சிறையில் இருந்து பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையை பிறப்பித்தும், வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது . இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவரை காவல்துறை வேனில் போலீசார் திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் . தினமணி

கருத்துகள் இல்லை: