வியாழன், 9 பிப்ரவரி, 2017

மிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி ? குனிந்தால் லாபமா? நிமிர்ந்தால் லாபமா? டீக்கடைக்காரர் கணக்கு ....

எல்லா எம்.எல்.ஏக்களும் மன்னார்குடி மாபியாவை ஆதரித்தாலும், தமிழகமே அவர்களை எதிர்க்கிறது என்பது பன்னீருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. இனி குனிந்தால் லாபமா, நிமிர்ந்தால் லாபமா என்று கூட்டிக் கழித்துப் பார்த்தார் அமாவாசை – நிமிர்ந்து விட்டார். panneer selvam  (2)பன்னீருக்கு எப்படி ‘தைரியம்’ வந்தது?
பன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது?
கொஞ்ச நாளுக்கு முன்னர்தான் ”மிக்சர் பன்னீர்” என்று கடற்கரையே அவரைக் கழுவி ஊற்றியது.
அப்படிப்பட்ட பன்னீர் இன்றைக்கு தைரியமாகப் பேசுகிறார், கேள்வி கேட்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?
ஏனென்றால், தமிழக மக்கள் கேள்வி கேட்பதை அவர் பார்த்துவிட்டார். காற்று வீசும் திசையைப் பார்த்து விட்டார்.“கு றுக்கு வழியிலே ஆட்சியைப் பிடிச்ச குலேபகாவலி சசிகலா” என்று மெரினாவில் கோவன் பாடத் தொடங்கியதும் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
போயஸ் தோட்ட வீதியிலேயே சசி கும்பலை எதிர்த்துப் பாடுகிறார் ஒரு பெண்.
சசிகலாவை தெருவில் போட்டுத் துவைக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள்.
அந்தப் பெண்கள் ஜெ மீது வைத்திருக்கும் பக்தி முட்டாள்தனமாக இருக்கலாம். ஜெயாவை சதி செய்து கொன்று விட்டதாக அவர்கள் கூறும் குற்றச் சாட்டு ஆதாரமற்றதாகவும் இருக்கலாம்.
ஆனால், அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
“70 நாட்களாக என்ன நடந்தது? எனக்கு பதில் சொல்” என்று கேட்கிறார்கள். அது சசிகலாவைக் கேட்கும் கேள்வி மட்டுமல்ல, சசிகலாவுக்கு துணை நின்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம், கவர்னர், மோடி, அப்போலோ சென்று வந்து சசிகலாவுக்கு சான்றிதழ் கொடுத்த கட்சித் தலைவர்கள் – ஆகிய அத்தனை பேரையும் பார்த்து கேட்கும் கேள்வி.

000
panneer selvam  (3)
பன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது?
“ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் போட்டுவிட்டோம் கலைந்து போ” என்கிறது போலீசு. “முடியாது. சட்டத்தைக் காட்டு, படித்துப் பார்க்காமல் எப்படி போக முடியும்?” என்று கேட்கிறார்கள் மாணவர்கள்.
“போலீசையே கேள்வி கேட்கிறாயா?” என்று ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறது போலீசு. “ஏன் அடித்தாய் எங்கள் பிள்ளைகளை?” என்று மீனவர்கள் கேள்வி கேட்கிறார்கள். மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள். “ஏன் அடித்தாய் மீனவர்களை என்று தமிழகமே கேள்வி எழுப்புகிறது“
அகிலா என்ற ஒரு பெண் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வானதி சீனிவாசனும், போலீசு அதிகாரியும், புதிய தலைமுறை நெறியாளரும் தடுமாறுகிறார்கள். உளறுகிறார்கள்.
ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் உலவும் ஆளும் வர்க்க எடுபிடிகளின் சாயம் வெளுக்கிறது. மைக்கை நீட்டிக் கேள்வி கேட்பவர்களைப் பார்த்து, மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஊடக மாமாத்தனத்தின் மானம் கப்பலேறுகிறது.
மாணவர்களையும் இளைஞர்களையும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று நினைத்துக் கொண்டு அறிவுரை சொன்ன லாரன்சு, ஹிப்ஹாப் ஆதி முதல் ரஜனிகாந்த் வரை அத்தனை சினிமாக்காரர்கள் முகத்திலும் அச்சம் படர்கிறது. ரிலீஸ் ஆனால் அசிங்கமாகி விடுவோமோ என்று “சிங்கம்” பம்முகிறது.
000
து பன்னீருக்கு வந்த தைரியம் அல்ல நண்பர்களே, தமிழ் மக்களுக்கு வந்திருக்கும் தைரியத்தின் விளைவு. பன்னீருக்கு சுயமரியாதை உணர்வு வந்துவிட்டதாக நினைக்காதீர்கள். இது தமிழக மக்களிடம் பொங்கிய சுயமரியாதை உணர்வின் விளைவு.
எல்லா எம்.எல்.ஏக்களும் மன்னார்குடி மாபியாவை ஆதரித்தாலும், தமிழகமே அவர்களை எதிர்க்கிறது என்பது பன்னீருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. இனி குனிந்தால் லாபமா, நிமிர்ந்தால் லாபமா என்று கூட்டிக் கழித்துப் பார்த்தார் அமாவாசை – நிமிர்ந்து விட்டார்.
000
panneer selvam  (1)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி.
ல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி. பன்னீரோடு சேர்ந்து கரையேறிவிடலாம் என்று பார்க்கிறது சங்க பரிவாரம். மன்னார்குடி மாபியாவிடமிருந்து தாங்கள்தான் தமிழகத்தைக் காப்பாற்றியது போலக் காட்டுவதன் மூலம், காவிரி உள்ளிட்ட எல்லா துரோகங்களையும் மறைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யும்.
அம்மா ஆன்மாவுடன் பன்னீர் பேசிய காட்சி என்பது ஏ, பி, சி – மூன்று ஏரியாக்களிலும் நூறு நாள் ஓடும். இனிமேல்தான் இருக்கிறது படத்தின் காமெடி டிராக். சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்றும், அந்தக் கட்சியின் ஜனநாயக உரிமை என்றும் வக்கணை பேசிய யோக்கியர்களெல்லாம் “அது போன மாசம்” என்று சமாளிப்பார்கள். “உஸ்ஸ்… யப்பா…. எப்டியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியிருக்கு” என்று தெனாய்ஞ்சு போவார்கள்.
அல்லது முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு “மாநில உரிமை” என்று காமெடி பண்ணுவார்கள். உடனே “ஊழல் என்ன மாநில உரிமையா” என்று பாஜக நாராயணனும், வானதி சீனிவாசனும் தகரத்தில் ஆணியால் கீறியது போலக் கத்துவார்கள்.
000
ன்னீர் பேசியிருக்கும் எதுவும், யாருக்கும் புதிய விசயமல்ல. பன்னீர் பேசி விட்டார் என்பது மட்டும்தான் புதிய விசயம்.
இரவு முழுவதும் வெள்ளை வேளேரென்ற சொகுசு கார்கள் வரிசை வரிசையாக போயஸ் தோட்டத்தை மொய்க்கின்றன. காருக்குள்ளேயிருந்து மடிப்பு கலையாத மினிஸ்டர் ஒயிட்டில் பன்றிகள் பரபரப்பாக இறங்குகின்றன. இது “வந்தனோபசார கடைசி ஆட்டம்”, இந்த நான்கு ஆண்டுகளுடன் கதை முடிந்தது என்று எம்.எல்.ஏ க்கள் எல்லோருக்கும் தெரியும்.
மிச்சமிருக்கும் நான்கு வருசம் சசிகலாவுடன் இருப்பதா, அதற்குப் பிந்தைய எதிர்காலத்தை யோசித்து இப்போதே தாவுவதா என்பதுதான் அவர்கள் எல்லோருடைய கவலையும்.
சசிகலாவா, ஸ்டாலினா, பாரதிய ஜனதாவா – யாருக்கு “பொக்கே” கொடுத்து கும்பிடலாம். என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடைய கவலை.
இனி, இவர்களெல்லாம் தங்களுடைய கவலையை மக்களுடைய கவலையாக மாற்றுவார்கள். அதாவது திருடர்கள் தங்களுடைய கவலையை, பறிகொடுத்தவர்களான நம்முடைய கவலையாக மாற்றுவார்கள்.
அந்த  *$#*#$*  வேலையை ஊடகங்கள் செய்யும்.
000
“கவர்னர் என்ன செய்வார்? மோடி என்ன செய்வார்? ஸ்டாலின் என்ன செய்வார்” என்று விவாதங்கள் நடக்கும்.
“பன்னீர் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக சொல்லி விட்டாரே, இதை கவர்னர் ஒப்புக்கொள்வாரா?” “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீருக்கு டயம் கொடுப்பாரா அல்லது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா?” “ஜனாதிபதி ஆட்சி வருமா? தேர்தல் வருமா?”
“அரசியல் சட்டத்தின் 9999(அ) பிரிவு என்ன சொல்கிறது (ஓ) பிரிவு என்ன சொல்கிறது?” “இதற்கு முன் இதே போன்ற சூழ்நிலையில் அரியானாவில் கவர்னர் என்ன செய்தார், கர்நாடகாவில் என்ன செய்தார், வெங்காயத்தில் என்ன செய்தார்?”
“குதிரை பேரம் நடக்குமா? பன்னீரை ஸ்டாலின் ஆதரிப்பாரா? அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவார்களா? எம்.எல்.ஏ க்களை கடத்துவார்களா? ஒரு எம்.எல்.ஏ வின் விலை என்ன? எந்த சாதி எம்.எல்.ஏ எந்தப் பக்கம் போவான்?” – இப்படி விவாதங்கள் நடக்கும்.
இதற்கு அன்றாடம் பத்து வல்லுநர்கள், ஆர்வலர்கள், நிலைய வித்வான்கள் பவுடர் போட்டுக் கொண்டு, நாக்கைத் தீட்டிக்கொண்டு தயாராக இருப்பார்கள். திருவிழா சீசன் கரகாட்ட செட் போல, இந்த சானலுக்கும் அந்த சானலுக்கும் பறந்து கொண்டிருப்பார்கள்.
000
panneer selvam  (1)_1
பன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல
ன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல.
அம்மா சமாதியில் உருக்கமாகப் பேசும் பரிதாப பன்னீரைப் பார்க்கும்போது, மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் பன்னீர் நிற்கும் திருப்பதி மொட்டை படத்தையும், பன்னீரின் சகோதரர்தான் தமிழக மணல் கொள்ளைக்கு மன்னார்குடி மாபியாவால் நியமிக்கப்பட்ட இன்சார்ஜ் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று சசிகலாவுக்கும் அதிமுகவின் ஜனநாயக உரிமைக்கும் பரிந்து பேசும் முன்னாள் மக்கள் நலக்கூட்டணியினர்தான், “அதிமுகவின் வெற்றி பணம் கொடுத்து, தில்லுமுல்லு செய்து பெறப்பட்ட முறைகேடான வெற்றி” என்று பேசியவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று மன்னார்குடி மாபியாவிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த தேவதூதர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள முனைகின்ற பாஜகவினர்தான், சசிகலாவையும் ஜெயாவையும் ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற அரும்பாடு பட்டவர்கள், காவிரியைத் தடுத்து தமிழக விவசாயிகளின் குடி கெடுத்தவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
000

“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார் நாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை !
லை முதல் கால் வரை கிரிமினல் மயமாகிவிட்ட இந்த அரசமைப்புக்குள் யாராவது ஒருவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு பிறகு ஏமாந்து விட்டதாகப் புலம்பியது போதும்.
மெரினா மாணவர்களும் இப்படி யோசித்து போராட்டத்தை ஏதாவது ஒரு கட்சியிடம் ஒப்படைத்திருந்தால், நிச்சயமாக ஏமாற்றப்பட்டிருப்பார்கள். வாடிவாசல் திறந்திருக்காது.
“உன் கட்சி, சட்டம், கோர்ட்” பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. “வாடிவாசலைத் திறக்காமல் வீடுவாசல் போவதில்லை” என்று தமிழகமே தெருவில் நின்றதன் விளைவாகத்தான் வாடிவாசல் திறந்தது. பொறுப்பை கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டு நாம் வீட்டுக்குப் போயிருந்தால், வாடிவாசல் திறந்திருக்காது.
“அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதுதான் ஜனநாயகம்” என்று புரிந்து கொண்டோமானால், புதிய புதிய வாயில்கள் திறக்கும்.
“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார்
நாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை !
  • சூரியன்  வினவு

கருத்துகள் இல்லை: