"நீங்க த.மா.கா.வாசன் விவகாரத்தை சுட்டிக் காட்டறது புரியுதுங்க தலைவரே.''
""சைக்கிளை இழந்து தென்னந் தோப்பு சின் னம் வாங்கி இப்ப கிட்டதட்ட தனிமரமா நிக்கிற வாசன், தாய்வீட்டுக்கே திரும்பலாமாங்கிற எண் ணத்துல ஊசலாடிக்கிட்டிருக்கார். இந்த நேரத்தில், கட்சியிலிருந்து பிரிஞ்சி போனவங்களை காங்கிரஸ் மீண்டும், கட்சியில் சேர்க்கும் திட்டத்தை அகில இந்திய அளவில் தொடங்குச்சு. இதன்படி பிற கட்சிகளுக் குப் போன பலரும், தாய்வீடான காங்கிரஸுக்கே திரும்ப ஆரம்பிச்சிருக்காங்க. இதைக்கண்ட வாசன், புதுவை மாநில காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி யிடம் தன் அபிப்பிராயத்தைச் சொன்னார். இதைத் தொடர்ந்து, டெல்லிக்கு விரைந்த நாராயணசாமி, சோனியா காந்தியை சந்திச்சி, வாசனின் மன ஓட்டத்தைச் சொல்லியிருக்கார்.''
""அங்கே என்ன ரிப்ளை வந்ததாம்?''
""நான் சொல்றேன். .. எல்லாத்தையும் அமைதி யாகக் கேட்டுக்கிட்ட சோனியா, "காங்கிரஸை எதுக்காக உடைச்சி, வாசன் தனிக்கட்சி ஆரம்பிச் சார்ன்னு அவர் ஒரே ஒரு ஞாயமான கார ணத்தைச் சொல்லட்டும். அதன்பிறகு, நான் என் முடிவைச் சொல்றேன்'னு சொல்லிட்டாராம். சோனியாவின் க்ரீன் சிக்னல் கிடைக்காத நிலையில், அடுத்து என்ன பண்றதுன்னு வாசன் யோசிச்சிக்கிட்டிருக்காராம்.''’
படங்கள் : ஸ்டாலின், அசோக் நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக