சனி, 11 பிப்ரவரி, 2017

புழுகியர் திலகம் சி ஆர் சரஸ்வதி பன்னீர்செல்வத்தின் கொ.ப. செ ஆவார்?

தமிழகத்தில் அண்ட் புழுகி, ஆகாச புழுகி என்று பட்டம் கொடுத்தால் அது நடிகை சி.ஆா். சரஸ்வதிக்குதான் கொடுக்க வேண்டும். இந்த பட்டத்திற்கு 100க்கு 200 சதவீதம் தகுதியானா் இவா். அம்மா எழுந்து நடந்தாங்க. இட்லி சாப்பிட்டாங்க. காவிரி பிரச்சனைக்கு ஆலோசனை சொன்னங்க. மந்திரி சபை கூட்டத்த நடத்தினாங்க. ஜெயலலிதாதான் சசியின் கையைப்பிடித்துக் கொண்டு உன்னை விட்டா ஆளே கிடையாது. நீ தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவேண்டும் என்று சொன்னங்க என்று கலா், கலரா காதுல பூ சுத்ததான் சி.ஆா். சரஸ்வதிக்கு தெரியும். இந்திய வரலாற்றில் முதல் முறையாக, நான் சசியோடு இருப்பதால் பொதுமக்கள் போன்செய்து கண்டபடி திட்டுறாங்க என்று உண்மையை சொல்லியுள்ளார்.
இது குறித்து அவா் கூறியதாவது: நான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்; இது, பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால், என் மொபைல் போனில், பெண் என்றும் பார்க்காமல், கண்டபடி திட்டுகின்றனர். அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை. இரண்டு நாட்களாக, என் மொபைல் போனை, ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். அரசியல் பார்வையாளா்களின் பார்வையில், இது பன்னீர் செல்வத்தின் பக்கம் மக்கள் ஆதரவு உள்ளது என்பதை உணா்ந்த சரஸ்வதி அந்தர் பல்டி அடித்து பன்னீர் செல்வத்திடம் விரைவில் செல்வதற்கான அச்சாரம் என்றே கூறுகின்றனா்? லைவ்டே

கருத்துகள் இல்லை: