வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ 30 போ் உண்ணாவிரதம் ,சித்திரவதை! கவர்னர் மீட்க வேண்டும், மைத்திரேயன் பேட்டி!

சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என்று கூறி அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க.எம்..பி.,யும் , முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பதாவது : சசிகலாவால் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறி ரிசார்ட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அவா்கள் சசியின் உறவினர்களால் பல சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனா் என்று தகவல்களும் வருகிறது. இந்த விவகாரத்தில், கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். laivde

கருத்துகள் இல்லை: