வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தவறு: தேர்தல் ஆணையத்திற்கு மதுசூதனன் கடிதம்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தவறு. அதிமுக தொண்டர்களால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்து போயஸ் கார்டன் வந்தவர் சசிகலா. சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். சசிகலா பொதுச்செயலாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். 5 ஆண்டு உறுப்பினராக இருந்தால் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வர முடியும் என்றார். படங்கள்: செண்பகபாண்டியன் நக்கீரன்

கருத்துகள் இல்லை: