ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் உள்ளிட்ட 2000 திமுக.,வினர் மீது வழக்கு

சென்னை மெரினாவில் தடையை மீறி நேற்று போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்டாலின் மட்டுமின்றி 63 எம்.எல்.ஏ.,க்கள், 3 எம்.பி.,க்கள் உள்ளிட்ட 2000 திமுக.,வினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தியது, சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தினமலர்

கருத்துகள் இல்லை: