புதன், 13 ஜூலை, 2016

சத்தம் போடாமல் உதவி செய்யும் ஹன்சிகா மொத்வாணி


நடிகை ஹன்சிகா மொத்வானி சாலையோரம் வசிப்போருக்கு உதவி செய்யும் காட்சிகள், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் தூங்குவோருக்கு ஹன்சிகா போர்வையும், குடிநீர் பாட்டில் வழங்கியுள்ளார். தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பாமலேயே, அவர்களுக்கு அருகில் போர்வையும், குடிநீர் பாட்டிலையும் வைக்கிறார். விழித்திப்பவர்களிடம் அவர்களின் கையில் போர்வையும், குடிநீர் பாட்டிலையும் கொடுத்தார். ஹன்சிகா ஏற்கனே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: