முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேச முடியாத சூழலுக்கு வந்து விட்டார். அப்படியே பேசினாலும் நினைவு சக்தியை இழந்து விட்டார் என்கிறார்கள்.
மதுரை அண்ணன், கனிமொழி, போன்றவர்களின் எதிர்காலம் இனி கேள்விக்குறிதான் என்கிறார்கள் மூத்த அரசியல் வாதிகள்..! அதேபோல ராசாத்தி அம்மாள் இனி கோபாலபுரம் போய் காரியத்தைச் சாதிப்பது கனவிலும் நடக்காது.
கலைஞர் கனிமொழி வீட்டிற்கு போவதும் இனி இல்லை..! இப்படி இல்லை…இல்லை என்பதற்கு அந்த குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள்..!
இனி தளபதி வைத்தது தான் சட்டம். ஒன்று அடங்க வேண்டும். அல்லது மீற வேண்டும். வேறு வழியே இல்லை.
ஆனால், கனிமொழியின் தாயார் அடங்கிப் போகும் டைப் அல்ல. அவருக்கு நாடார் சமூகத்தின் ஆகப் பெரும் அதரவு உண்டு கனிமொழிக்கும் நல்ல ஆதரவு வட்டம் கட்சிக்குள் உண்டு.
மதுரை அண்ணன் அழகிரியும் கை கோர்ப்பார்..! இப்படி நிறைய சாதக பாதகங்களை அலசி இருக்கிறார்கள்.
எனவே, தளபதி இனி எந்த அளவிற்கு அரவணைப்பார் என்பதைப் பார்ப்பார்கள்..! இல்லை என்றால் திமுக உடைவதை யாராலும் தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாது என்கிறார்கள்.
‘கலைஞர் திமுக’ என்கிற கட்சியை ஆரம்பிக்கவும் எல்லா ஏற்பாடுகள் ரெடி என்கிறார்கள். இது கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது…! முகநூல் பதிவு லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக