வியாழன், 22 டிசம்பர், 2016

ஸ்டாலின் :சசிகலாவை சந்தித்த 10 துணைவேந்தர்களையும் பதவி நீக்கம் செய்யவேண்டும்

சசிகலாவை சந்தித்த துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக் கழக துணைவேந்தர்கள் போயஸ் தோட்டம் சென்று அரசு பொறுப்பில் இல்லாத திருமதி சசிகலா அவர்களை சந்தித்துள்ளது அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தையும் மாண்பையும் கெடுத்து விட்டது. அதுவும் திருமதி சசிகலா நடராஜன் அதிமுக கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இவர்கள் கூறியிருப்பது துணை வேந்தர்கள் அரசியல்வாதிகளாகி விட்டதை அப்பட்டமாக காட்டுகிறது. 
எனவே மாண்புமிக்க துணை வேந்தர் பொறுப்பை அரசியலாக்கும் நோக்கோடு செயல்பட்ட துணை வேந்தர்களை உரிய பணியாளர் சட்டங்களின்படி பதவி நீக்கம் செய்து, நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் பயிலும் ‘உயர்கல்வியின் தரத்தை’ பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நக்கீரன்


கருத்துகள் இல்லை: