ஞாயிறு, 18 டிசம்பர், 2016

குஜராத் டீக்கடைகாரர் வீட்டில் ரூ.400 கோடி பறிமுதல்! டெய்லர் வீட்டில் ரூ.30 லட்சம் , 2.5 கிலோ தங்கம் பறிமுதல்!

500, 1000 ரூபாய் நோட்டுக்கள், பழைய ரூபாய் நோட்டுக்கள் அளவிற்கு புதிய நோட்டுக்கள் அச்சடிக்கப்படாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து விட்டார். டிஜிட்டலுக்கு மாற வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டார். அதே நேரம் நாடுமுழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கிஷோர் பைஜ்யவாலா என்பவர் வீட்டில் பணம், தங்க கட்டிகள், நகைகள், சொத்து பத்திரங்களை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ. 400 கோடி ஆகும். இவர் டீக்கடை வைத்திருந்தவர் ஆவார். பின்னர் பைனான்சியராக மாறினார்.
இதே போல் டெய்லர் ஒருவரின் மொகாலி மற்றும் சண்டிகர் இல்லத்தில் 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2.5 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் 18 லட்சம் ரூபாய் புதிய ரூபாய் நோட்டுக்கள் ஆகும். ஒரு ஒரு டீக்கடைக்காரன் பிரதமர் இன்னொரு டீக்கடைக்காரன் முதல்வர் .. இனி சம்பந்தம் வச்சுக்கிட்டா டீக்கடைக்காரன் குடும்பத்தில சம்பந்தம் வச்சுக்கணும் டாய்

கருத்துகள் இல்லை: