செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கதை திருட்டு வழக்கில் இயக்குனர் சங்கர் மீண்டும் வாய்தா ...

எந்திரன் பட கதைத்திருட்டு வழக்கு, டைரக்டர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் . ஏற்கனவே இசைஞானி, இளையராஜாவின் பாடலை அவர் அனுமதியிலாமல், தனது கப்பல் படத்தில் டைரக்டர் சங்கர் பயன்படுத்தியிருந்தார். இது தொடர்பாக சங்கருக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
கலாநிதிமாறன் ஆகியோர் மீது நடந்துவருகிறது. மேற்கண்ட இரு தரப்பும் பல்வேறு வகையிலும் வழக்கை இழுத்தடித்து வருகின்றன. இந்த நிலையில், 27-ந் தேதியான இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்ந்த எழுத்தாளரை டைரக்டர் சங்கர் தரப்பு, இன்று குறுக்கு விசாரணை செய்யவேண்டும். ஆனால் இன்றும் டைரக்டர் சங்கர் தரப்பு வாய்தா கேட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எழுத்தாளர் தரப்பு, ’டைரக்டர் சங்கர் மட்டும்தான் உலகத்திலேயே பிஸியா? எல்லோரும் அவரவர் வேலையில் பிஸியாக இருப்பவர்கள்தான். எங்கள் தரப்பை எதற்கு தொடர்ந்து காத்திருக்கவைக்கிறீர்கள்? இந்தபோக்கை தொடர்ந்து அனுமதிக்கக்கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தது. அடுத்தமுறை கண்டிப்பாக வழக்கை எதிர்கொள்வோம் என்று டைரக்டர் சங்கர் தரப்பு கேட்டுக்கொண்டதால், வழக்கை நீதிமன்றம் வரும் 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தது  நக்கீரன்,இன்


கருத்துகள் இல்லை: