திங்கள், 16 மே, 2016

கலைஞருக்கு மட்டும் Facebook தடை ... லக்கானி திமுகவினருக்கு மட்டும் Social media கட்டுப்பாடு விதிக்கிறார் ஏன்? புரிகிறதா?

570 கோடி குறித்து கலைஞர் கேள்வி எழுப்பியதும் முகநூலில் எழுத கலைஞருக்கு தடை விதிக்கிறார் லக்கானி. லக்கானியும், அதிமுகவினரும் இதுகுறித்து "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல" என பதட்டம் காட்டுவது சந்தேகங்களை எல்லாம் வலுப்படுத்துகிறது.
மிசா காலத்தில் இருந்து ஃபேஸ்புக் காலம் வரை கலைஞர் எழுதினால் தான் எல்லா திருடர்களுக்கும் வயிற்றைக் கலக்குகிறது. இந்த நொடி வரை ஜெயலலிதா ஜெயா டிவியில் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் கலைஞர் முகநூலில் எழுதுவதுதான் உறுத்துகிறது. ஏனெனில் கேள்வி எழுப்புவது கலைஞர் தானே!!
ஏன் கலைஞரை மாய்ந்து மாய்ந்து எதிர்க்கிறார்கள் எனப் புரிகிறதா? ஏன் கலைஞரை பரம்பரை எதிரி என மேடையில் அறிவிக்கிறார்கள் எனத் தெரிகிறதா? தினமணி, தினத்தந்தி, தினமலர், புதியதலைமுறை, குமுதம் ரிப்போர்ட்டர் என எல்லோரும் சேர்ந்து ஜெவுக்கு ஏன் முட்டுக் கொடுத்து கலைஞரை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்பது புரிகிறதா? விஸ்வரூபம் விவகாரத்தில் இருந்து, நுழைவுத்தேர்வில் இருந்து, தேர்தல் வரை கலைஞரின் ஒரு முகநூல் பதிவு ஏற்படுத்தும் அலையை ஒரு மிகப்பெரிய சொற்பொழிவால் கூட ஏற்படுத்த முடியாது. அவர்தான் கலைஞர்
...கிளிமூக்கு அரக்கன்  முகநூல்

கருத்துகள் இல்லை: