புதன், 18 மே, 2016

ரிசர்வ் வங்கி: 570 கோடி விவகாரம் தேர்தலால் பெரிதுபடுத்தப்படுகிறது .. So வங்கி கொள்ளையர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தரப்படும் ?

சென்னை: கோவை ஸ்டேட் வங்கியிலிருந்து ஆந்திர வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டு, தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கிய ரூ.570 கோடி தொடர்பாக, தொடர்ந்து மர்மம் நீடித்தது. இது பற்றி இன்று முதன்முதலாக ரிசர்வ் வங்கி வாயை திறந்துள்ளதுவங்கிப் பணம் என்ற போதிலும் அது கொண்டு சென்றப்பட்ட விதத்தில் ஏராளமான சந்தேகங்கள் எழுந்தன. தேர்தல் நேரம் என்பதால், இந்தப் பணம் யாருடையது, யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என ஏகப்பட்ட அனுமானங்கள் தோன்றின. பத்திரிகைகளிலும் பல்விதமாக இது விவாதிக்கப்பட்டது.இந்நிலையில், ரூ.570 கோடி ரூபாய் விவகாரம் முடிவுக்கு வரும் வரை தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  ஏப்ரல் 18 ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. செய்தி . இத சொல்லவா இத்தன நாலு உங்களுக்கு ???? எங்கயோ படு ஸ்ட்ராங்கா  இடிக்குது ??


இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள ஆர்.பி.ஐ., தனது பதில் மனுவில், ''வங்கிப்பணமான ரூ.570 கோடி அனுமதி பெற்றே கொண்டு செல்லப்பட்டது. ரூ.570 கோடி கொண்டு செல்லப்பட்டதற்கு ஏப்ரல் 18 ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இதுபோன்று முன்னரே பெருந்தொகை பரிமாற்றம் நடந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் ரூ.570 கோடி பெரிதுபடுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: