திங்கள், 16 மே, 2016

ஆர்.கே.நகர் பட்டுவாடா கின்னஸ் சாதனை ! அரவக்குறிச்சி தஞ்சாவூர் எல்லாம் ஜுஜுப்பீ

ஆர்.கே.நகரில் அரவக்குறிச்சியை காட்டிலும் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது: திருமாவளவன் ஆர்.கே.நகரில் அரவக்குறிச்சியை காட்டிலும் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுணிவு. இந்த தேர்தலில் வியாபாரிகள், சாதாரண மக்கள் கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம் அதிமுக, திமுக கொண்டு சென்ற கோடிக்கனக்கான பணத்தை கைப்பற்றாதது புரியாத புதிராகவே உள்ளது.
அரவக்குறிச்சி தேர்தலை தள்ளி வைப்பதற்கு ஊழல் முறைகேடுகள் காரணம். 234 தொதிகளிலும் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்கள் அரங்கேறி உள்ளன. குறிப்பாக ஆர்.கே நகர் தொகுதியில் வேறு தொகுதியை சார்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து உள்ளனர். எல்லா அத்துமீறல்கள் அரிகாரிகள் துணையோடு, தேர்தல் ஆணையத்தின் முன்னரே நடைபெற்றுள்ளது. ஆர்.கே.நகரில் அரவக்குறிச்சியை காட்டிலும் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார் நக்கீரன்,in

கருத்துகள் இல்லை: