வெள்ளி, 22 ஏப்ரல், 2016

உத்தரகண்ட்..உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக உச்சநீதி நீதிமன்றில் தடை உத்தரவு....பாஜக குதிரை பேரம் ஆரம்பம்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. ஆனால் முதல்–மந்திரிக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். பாரதீய ஜனதா கட்சியுடன் அவர்கள் கை கோர்த்தனர். இதன் காரணமாக ஹரிஷ் ராவத் அரசு, சட்டசபையில் மார்ச் 28–ந் தேதி நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ள இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளில் (மார்ச் 27–ந் தேதி) அங்கு அரசியல் சாசன எந்திரம் செயலிழந்து போய் விட்டதாக கூறி, ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக ஹரிஷ் ராவத், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதுக்குதான் பாஜக பயங்கரவாதி எம் எல் ஏ கணேஷ்ஜோஷி அந்த வாயில்லா  குதிரையை  அடித்து கொன்றான்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த திங்கட்கிழமை முதல் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி வி.கே. பிஸ்த் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் நடந்து வந்தது. அப்போது மத்திய அரசின் நடவடிக்கையை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் , உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து, தீர்ப்பு அளித்தனர்.  dailythanthi.com


இது மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக  கருதப்பட்ட நிலையில்,  உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை பிற்பகலில்  விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

உத்தரகாண்டில் குடியுரசுத்தலைவர் ஆட்சி 27 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், உத்தரகாண்ட்  உயர் நீதிமன்ற உத்தரவு  26 ஆம் தேதிக்குள் அனைத்து தரப்புக்கும் கிடைக்க வேண்டும் எனவும், அதுவரை குடியரசு தலைவர் ஆட்சியை திரும்ப பெற மத்திய அரசுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தது. உத்தரகாண்ட் நீதிமன்ற உத்தரவையடுத்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், இடைக்கால தடையால்,  27 ஆம் தேதி வரை  குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்.  இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: