வியாழன், 21 ஏப்ரல், 2016

ஒலிம்பிக் சுடர் சூரிய ஒளியின் குவியத்தாலேயே ஏற்றப்படுகிறது

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக்
போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது.
பாரம்பரிய முறையில் ஏற்றப்படும் சுடரை கிரேக்க நடிகை ஒருவர் கையிலேந்தியுள்ளார் பாரம்பாரிய முறையில் இந்த சுடரை ஏற்றும் தற்போதைய நடைமுறை 80 ஆண்டுகளுக்கு முன்னர் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது மீண்டும் உயிர்பிக்கப்பட்டது.

சூரிய ஒளியை குழியாடியின் மையத்தில் விழும்படி செய்யப்பட்டு அதனால் உருவாகும் வெப்பத்தைக்கொண்டே ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுகிறது. பிரேசில் போட்டிகளுக்கான ஜோதி, முதல் ஒலிம்பிக் சுடரில் ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றலும், கிரேகத்தின் தென் பகுதி நகரொன்றில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலையம்சங்கள் நடத்தி ஒவ்வொரு முறையும் இச்சுடர் ஏற்றப்படும். போட்டிகான முதல் சுடர் கிரேக்கத்தைச் சேர்ந்த உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன் எலிஃபெத்தெரியோ பெட்ரௌனியாஸிடம் கையளிக்கப்பட்டது.

 இந்தச் சுடர் ஏற்றப்படுவதற்கு முன்னர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நீண்ட உடையணிந்த நடிகை ஒருவர், மிகவும் உளப்பூர்வமாக நிலத்தில் மண்டியிட்டு, குழியாடி ஒன்றில் விழும் சூரியக் கதிர்கள் மூலம் ஏற்படும் வெப்பத்தை, ஒலிம்பிக் சுடரை ஏந்திவரும் விளக்கின் மீது பாய்ச்சி அந்த ஜோதியை ஏற்றுவார். சுடர் ஏற்றப்படும் தினத்திலிருந்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றி தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்படும். பின்னர் அது பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் உலகெங்கும் பயணமாகக்கூடிய முதல் ஒலிம்பிக் பந்தத்தில் ஏற்றப்படும்.

அந்த முறையில் ஏற்றப்படும் ஒலிம்பிக் சுடரே பல நாடுகளில் பயணித்து, இறுதியாகப் போட்டி தொடங்கும் நாளன்று, புகழ்பெற்ற உள்நாட்டு விளையாட்டு வீரர்களால், அரங்கைச்சுற்றி வலமாக எடுத்துவரப்பட்டு, மிகவும் பிரபலமான வீரர் ஒருவரிடம் கையளிக்கப்படும். ரியோ போட்டிகளுக்கானச் சுடரின் தொடர் பயணம் தொடங்கியது.

அவர் அந்த அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரை ஒன்றுக்கு அச்சுடரை எடுத்துச் சென்று அங்கு போட்டி காலம் முழுவதும் எரியும் ஜோதியை ஏற்றிவைப்பார். ரியோ ஒலிம்பிக்ஸுக்கான சுடரை ஏந்தும் பந்தம் எனினும் ஒவ்வொரு ஒலிம்பிக்ஸிலும் அந்த ஒலிம்பிக் ஜோதி எவ்வாறு ஏற்றப்படும் என்பது கடைசிவரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும்.

ரியோ ஒலிம்பிக் பந்தத்துடன் பிரேசில் அதிபர் டில்மா ரூஸோவ். ஆனால் போட்டி காலத்தில் அவர் அதிபராக இருப்பாரா என்பது கேள்விக்குறியே இம்முறை ரியோ டி ஜெனீரோவிலுள்ள மாரக்கானா விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைக்கப்படும்.bbc.tamil.com

கருத்துகள் இல்லை: