திங்கள், 28 மார்ச், 2016

தமிழகத்தின் கள்ள குரலுக்கான தேர்வாகிவிட்ட( டி ஆர் பி) திருட்டு ரியாலிட்டி புரோகிராம்.....

ravi nag mar 27aanthaireporter.com :போன வாரம் முழுவதும் பெரிய சர்ச்சையாகி போன சூப்பர் சிங்கரின் முடிவுகள் தான். பலர் ராஜ கணபதி அல்லது ஃபரீதாவுக்கான விருதை ஆனந்தனுக்கு கொடுத்து விட்டனர் இது அக்கிரமான செயல் என்றும் மறு நாளே ஆனந்த் ஒரு பின்னணி பாடகர் அதனால் அவர் ஃப்ரெஷர் அல்ல என அவர் பாடிய பாட்டுக்களை வரிசைபடுத்த இந்த வருடம் ஒரு படி மேல் போய் அந்த ரியாலிட்டி ஷோவுக்கு நிரந்த நீதிபதிகளான ஸ்ரீனிவாஸ், உன்னிமேனன் போன்றவர்களுடன் நேரிடையாக சமூகதளங்களில் விவாதிக்க கடைசியில் விசய் டிவி இதாம்ல எங்க ரூல்ஸ் கன்டி ஷன்ஸ் வாயையை பொத்தின்டு போறேளா என மற்றவர்களுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்க என்னம்மா இப்படி பன்றீங் களேமா புகழ் அமெரிக்க ஜெர்ரி ஸ்ப்ரிங்கர் ஷோவை உல்டா அடித்து கொஞ்சம் கீரல் விழுந்த அப்பாவி படிப்பறிவு இல்லாத ஃபேமிலிக்களை கூட்டி வந்து ஏழேழு ஜென்ம பகையாய் உருவெடுக்கவைக்கும் மிஸஸ் நாட்டாமையும் சேர்ந்து கொள்ள அதற்க்குள் 500 கோடி 1500 கோடி என வேறு பக்கம் பிரச்சினை திரும்ப கன்ஸ்யூமர் போர்டில் விஜய் டிவியை நேற்று வரை வைத்து வெளுத்துகொண்டே இருக்கின்றர் நக்கீரர்கள்……………….இதையெல்லாம் கொஞ்சம் மாற்று கோணத்தில் பார்ப்போம்.


என்னவளே அடி என்னவளே பாடிய உன்னி கிருஷ்னன், ஸ்ரீனிவாஸ் போன்றவர்களை நான் கல்லூரிபடிக்கும் காலங்களில் இசையின் ஒன் ஆஃப் தி பிரமமவாகவே நினைத்திருந்தேன்…..ஆனா என்னைக்கு காசுக்காக அனைத்தையும் விட்டு விசய் டிவி அடிமைகளாய் பத்தான்டுகளுக்கு மேல் பெஞ்சு தேய்ப்பதை பார்த்த போது ச்சீ இவர்களையா நாம் உயரத்தில் வைத்திருந்தோம் என சலிப்பூ தட்டி கொஞ்சம் கூட மரியாதைக்குறியவர்களற்று போனார்கள் என்பதே உண்மை. விசய் டிவி அல்ல பல டிவிக்களில் தலை காட்டுவதற்க்கே புரோகராம் புரடியூசர் முதல் சேனல் பிஆர் வரை அனைவருக்கும் மால் வெட்டியபிறகே வாய்ப்பு கிடைக்கும் என்ற பல உண்மைகள் இன்னும் பல பேருக்கு தெரியாத உண்மை.
இன்னும் ஒரு படியாக வேகமாக முன்னேற அடுத்தடுத்து புரோகிராமில் இருக்கனுமா பெண்களாய் இருந்தால் அவர்களையே விட்டு கொடுத்தல் ஆண் மகனாய் இருந்தால் டபுள் எம் ஏக்களாய் மாறணும் என்பது சொல்ல முடியாத உண்மைகள். அப்படி இணங்காத பெண்களை வற்புறுத்துவது, கார்னர் செய்வது, புகழை காட்டி படியவைப்பது என்ற அத்தனை மூன்றாம் தர செயல்களையும் ஒளிகற்றைக்கு பின்பு செய்வது இன்னும் வரை நடந்து கொண்டு இருக்கின்ற அவலம் தான் தொலைக்காட்சி நிலையங்கள்.
திடீர் திடீர் சமூக ஆர்வலர்கள், ஓவர் நைட் அரசியல் விமர்சர்கள் என பல நிகழ்ச்சிகளுக்கு போகும் தற்போதய மக்களும் எந்த தகுதியில் செல்கிறார்கள் என்றால் இதே போல் மால் அல்லது ஏதாவது வெட்டிய பிறகே அங்கு அவர்கள் பேச அனுமதிப்பர்.
இங்கிருந்த, இங்கு இருக்கின்ற பல திறமையானவர்கள் ஏன் இன்னும் தொலைகாட்சியில் தலை காட்டுவதில்லை அல்லது நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் ஜொலிக்க முடிவதில்லை என பார்த்தால் அவர்கள் நேர்மையான பயாஸ் அல்லாதவர்கள் என்பதே உண்மை. 3-6 மணி நேரம் நடக்கும் பல நீயா நானா நிகழ்ச்சிக்ளில் பேசியவர்கள் பல பேரின் கானொளி வரவே வராது டோட்டலாய் பாய்காட் செய்திருப்பார்கள் நன்கு யோசித்துபார்த்தால் அவர்களின் நேர்மைத்தனத்தாலும், மால் வெட்டாததாலும், முகஸ்துதி பாடாதாதாலும் என்பதில் மாற்றுகருத்தில்லை.
அந்த் வகையில் விசய் டிவி இன்னும் ஒரு படி மேல் போய் ஒருவர் விசய் டிவியில் முகம் காட்ட முதல் நாளே அடிமை சாசனம் என்னும் பான்டட் லேபர் அக்ரிமென்ட்டை போட்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கனும் இப்ப மட்டும் அல்ல அடுத்த 5 வர்ஷத்துக்கு என் ஆக்ரிமென்ட் போட்டு சங்கீதம் பாடுறவங்களை, டான்ஸ் ஷோக்கலிலும், அதை அடுத்து கனெக்ஷன் நிகழ்ச்சி, களக்க போவது யாரு, என்ற் அத்தனை நிகழ்க்ச்சிகளுலும் நீங்கள் பங்கு பெற வேண்டும் என்பதை தாண்டி இன வெறி யான வெள்ளைத்தோல் கல்ச்சர் இன்னும் ஓங்கி நிற்கும் சேனலில் ஒன்று விசய் டிவி.
அது மட்டுமல்ல டிஆர்பி ரேட்டிங் மற்றும் விலம்பரதார்கள் கைகாட்டும் ஆட்களை தேர்வில் இருந்து வெளியே போயிருந்தாலும் வைல்டு கார்டு ரவுன்டில் உள்ளே இழுத்து ஃபைனல் வரை கொண்டு செல்ல போட்டியாளர்கள்10 லட்சம் முதல் 1 கோடி வரை கையூட்டு கொடுக்கும் ஆட்களை தான் வின்னராக அறிவிக்கும் கொடுமையை இன்னும் ரியாலட்டி என நினைத்தான் நீங்க்ளும் நானும் அந்துமனிகள் தான் என்ற வாக்கியத்தோடு விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

கருத்துகள் இல்லை: