புதன், 18 மார்ச், 2015

கள்ளப்படம் வில்லியாக நடிக்க முன்வந்த லக்ஷ்மி ப்ரியா

தொழில் நுட்ப கலைஞர்களே நடிகர்களாக நடிக்கும் படம் ‘கள்ளப்படம்' . இதுபற்றி இயக்குனர்-ஹீரோ ஜெ.வடிவேல் கூறியது:உதவி இயக்குனர் ஒவ்வொருவரும் இயக்குனராக ஆகும் முயற்சியில் பல கஷ்டங்களை எதிர்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் ஒரு முடிவுக்கு வருவார்கள். அப்படி முடிவு எடுக்கும் ஒரு உதவி இயக்குனரின் வாழ்க்கை சம்பவம்தான் இக்கதை. தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னிறைவனிடம் கதையை கூறினேன். இதில் பணியாற்றும் 4 தொழில்நுட்ப கலைஞர்களுமே அந்தந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறோம் என்றேன். வித்தியாசமான ஸ்கிரிப்ட்டாக இருக்கிறது என்று பாராட்டி தயாரிக்க முன்வந்தார். இயக்குனர் பொறுப்பை நான் ஏற்க, ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு, காகின் எடிட்டிங், கே இசை பொறுப்பை ஏற்பதுடன் அந்தந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறோம். தமிழில் இதுவொரு புது முயற்சி. ஹீரோயினாக நடிக்க பலரிடம் கால்ஷீட் கேட்டபோது வில்லித்தனமான கேரக்டர் என்று நடிக்க மறுத்தனர். சுட்ட கதை பட ஹீரோயின் லட்சுமி பிரியா நடிக்க முன்வந்தார்.இவ்வாறு இயக்குனர் வடிவேல் கூறினார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: