வியாழன், 19 மார்ச், 2015

நடிகை லாவண்யா : டாக்டராக நடிக்க பளபளக்கும் காஸ்டியூம் தரப்பட்டது.

ஹீரோயின்கள் தங்களது வேடத்துக்கு பொருத்தமில்லாத வகையில் ஆடை, நகைகள் அணிந்து பந்தாவாக தோன்ற ஆசைப்படுகின்றனர். வேறு சில ஹீரோயின்கள் எளிமையான தோற்றத்தை நாடுகின்றனர். சசிகுமார் ஜோடியாக ‘பிரம்மன்‘ படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி கூறியது: கதாபாத்திரங்களுக்கு ஏற்பவும், காட்சி நடக்கும் சூழலுக்கு ஏற்பவும் உடை, நகைகளை அணிய வேண்டும் என்பதில் இயக்குனர்கள் எவ்வளவு கவனமுடன் இருப்பார்களோ அந்தளவுக்கு நானும் அதில் கவனம் செலுத்துவேன். நிஜத்திலும் ஆடம்பரமாக உடை அணிந்து வருவதை எப்போதும் நான் விரும்புவதில்லை. குறைந்தளவிலான நகைகள் மட்டுமே அணிவேன். காதில் சிறிய வளையமோ அல்லது கழுத்தில் சிறிய செயினோ மட்டுமே அணிந்துகொள்வேன். பளிச்சென்று தெரியவேண்டும் என்பதற்காக பளபளக்கும் ஆபரணமோ, ஆடையோ அணிவதில்லை. ஒரு படத்தில் டாக்டராக நடித்தேன். எனக்கு பளபளக்கும் காஸ்டியூம் தரப்பட்டது.  அது மருத்துவமனையில் படமாகும் காட்சி என்பதால் நானே காஸ்டியூமரிடம் பளபளக்கும் உடைக்கு பதிலாக சாதாரண உடை தரும்படி கேட்டேன். அதை இயக்குனரும் பாராட்டினார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: