
மது
இறைவனால் படைக்கப்பட்டது. மதுரை அளவோடு அருந்தினால் வளமாக வாழலாம். ஒரு
சிலர் அளவுக்கு அதிகமாக குடித்து, தங்களையும் கெடுத்து, குடும்பத்தையும்
கெடுத்துக்கொள்கிறார்கள். போதை பிரியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது
மட்டும் அல்லாமல், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் எங்கள்
சங்கத்தின் நோக்கமாக உள்ளது.
அரசு
அனுமதியுடன் நடத்தப்படும் பாரில் மது அருந்திவிட்டு, வெளியில் வந்தவுடன்
போலீசார் கைது செய்து இழிவு படுத்துகிறார்கள். இந்த போக்கை போலீசார் கைவிட
வேண்டும்.
அரசு
மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் அரசு நிர்ணயித்த விலையை விட,
அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. மதுக்கடைகளில், வாடிக்கையாளர்களுக்கு
கம்ப்யூட்டர் மூலம் பில் கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மதுக்கடைகளிலும்,
பார்களிலும் நடக்கும் தவறுகளை கண்டறிய அங்கு கண்காணிப்பு கேமரா
பொருத்தவேண்டும். பீர் கடைகளை அதிகமாக திறக்க வேண்டும். மதுபாட்டில்களில்
கரப்பான் பூச்சிகள் கிடக்கின்றன. மதுவை சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
நகர்ப்புறங்களில்
போதைபிரியர்கள் மீது வாகன சோதனை செய்து போலீசார் வழக்கு போடுகிறார்கள்.
அரசாங்கமே மதுவை விற்பனை செய்துவிட்டு, போலீசாரை விட்டு மது அருந்துபவர்களை
கைது செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக