ஞாயிறு, 27 ஜூலை, 2014

திருமாவளவன்: பாலஸ்தீனர் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை ?

பாலஸ்தீனர் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று  ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்; வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் முன் ஆகஸ்ட் 1-ல் ஆர்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். கட்சியின் மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். />மேலும் பேரவைக்கு வர திமுக உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவும், தனியார் பள்ளிகளில் எழை  குழந்தைகளுக்கு 25 % இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஊழியரை நியமிக்கவும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.dinakaran.com

கருத்துகள் இல்லை: