திங்கள், 28 ஜூலை, 2014

விஜயகாந்த் சக்கர நாற்காலியில் முகத்தை மூடியபடியே காரில் ஏறிச்சென்றார் .

Two weeks after he left to Singapore, DMDK president and Opposition leader of Tamil Nadu Assembly Vijayakant made an incognito return to Chennai on Sunday. சிங்கப்பூரில் இருந்து விஜயகாந்த் சென்னை திரும்பி வந்தார். அவர் முகத்தை துணியால் மூடியபடி சக்கர நாற்காலியில் வந்து காரில் ஏறிச்சென்றார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் கடந்த 13 ஆம் தேதி சிங்கப்பூருக்கு பயணம் சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் சிங்கப்பூர் சென்றதாக கூறப்பட்டது ஆனால் தனது மகன் நடிக்கும் படத்துக்கான வேலைகளை கவனிக்கவே விஜயகாந்த், சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.  கப்டன் சீக்கிரம் குணமாக வாழ்த்துகிறோம் tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: