செவ்வாய், 16 ஏப்ரல், 2013

டெல்லியில் மீண்டும் ஒரு பேருந்துக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்

டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை
செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லி சுல்தான்புரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.இந்த பஸ்சுக்குள் சிறுவர், சிறுமியர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பஸ் டிரைவர் ராகேஷ், மற்ற குழந்தைகளை அடித்து விரட்டி விட்டு, 11 வயது சிறுமியை மட்டும் இருக்க சொன்னார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். மருத்துவ பரிசோதனை செய்ததில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பஸ் டிரைவர் ராகேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

கருத்துகள் இல்லை: